1. சகோதரர்களே, ஆவியைப் பெற்றுக் கொண்டவர்களிடம் பேசுவது போல் உங்களிடம் பேச முடியவில்லை. ஊனியல்பு உள்ளவர்கள் போலவும், கிறிஸ்தவ வாழ்க்கையில் குழந்தைகள் போலவும், உங்களைப் பாவித்துப் பேச வேண்டியதாயிற்று.
|
2. உங்களுக்கு நான் ஊட்டியது பால் உணவே, கெட்டியான உணவன்று. அதை உண்ண முடியாதிருந்தீர்கள். இப்போதுங் கூட முடியாமல் தான் இருக்கிறீர்கள்.
|
3. ஏனெனில், இன்னும் ஊனியல்பு, உள்ளவர்களாகவே இருக்கிறீர்கள். உங்களிடையே பொறாமையும் சண்டை சச்சரவும் இருக்கையில் நீங்கள் ஊனியல்பு உள்ளவர்கள் தானே மேலும் மனித இயல்பு உள்ளவர்களாகத் தானே வாழ்கிறீர்கள்!
|
4. உங்களுள் ஒருவன், 'நான் சின்னப்பரைச் சேர்ந்தவன்' எனவும், வேறொருவன், ' நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன் ' எனவும் சொல்லும்போது நீங்கள் காட்டுவது வெறும் மனித இயல்பே அன்றோ?
|
5. ஆகிலும் அப்பொல்லோ யார்? சின்னப்பன் யார்? உங்களுக்கு விசுவாசம் கொண்டு வந்த வெறும் பணியாளர்களே அல்லரோ!
|
7. ஆனால், விளையச் செய்தவர் கடவுள் தாமே. ஆதலின் நடுகிறவனுக்கு என்ன பெருமை? நீர் பாய்ச்சுபவனுக்கு என்ன பெருமை? விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை எல்லாம்.
|
8. நடுகிறவனும் நீர் பாய்ச்சுப்பவனும் ஒன்றுதான். ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்பத் தனக்குரிய கூலியைப் பெறுவான்.
|
9. ஏனெனில், நாங்கள் கடவுளோடு உழைப்பவர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் பண்ணை, கடவுள் எழுப்பும் கட்டடம்.
|
10. கடவுள் எனக்களித்த அருளுக்கேற்பக் கை தேர்ந்த கட்டடக் கலைஞனைப் போல் நான் அடித்தளம் இட்டேன். வேறொருவன் அதன் மேல் கட்டுகிறான். ஒவ்வொருவனும் தான் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாய் இருக்கவேண்டும்.
|
11. ஏனெனில், ஏற்கனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறு அடித்தளத்தை எவனும் இடக்கூடாது.
|
12. இந்த அடித்தளத்தின் மேல், பொன், வெள்ளி,. விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றாலோ, மரம், புல், வைக்கோல் ஆகியவற்றாலோ ஒருவன் கட்டடம் எழுப்பலாம்.
|
13. அவனவன் செய்த வேலை இறுதியில் தெரிந்துவிடும். இறுதி நாள் அதைக் காட்டி விடும். ஏனெனில், அது நெருப்பின் நாளாய் வெளிப்படும். அந்த நெருப்பு ஒவ்வொருவனுடைய வேலை எத்தன்மையது என்பதை எண்பித்துவிடும்.
|
14. கட்டிய கட்டடம் நிலைத்திருந்தால் கட்டியவன் கூலி பெறுவான். கட்டியது எரிந்து போனால், அது அவனுக்கு இழப்பாகும்.
|
16. நீங்கள் கடவுளின் ஆலயம் என்பதும், கடவுளின் ஆவி உங்களுள் குடிகொண்டிருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?
|
17. கடவுளின் ஆலயத்தை எவனாவது அழித்தால், அவனைக் கடவுள் அழித்து விடுவார். ஏனெனில், கடவுளின் ஆலயம் பரிசுத்தமானது. நீங்களே அவ்வாலயம்.
|
18. யாரும் ஏமாந்து போகக் கூடாது. உங்களுள் எவனாவது இவ்வுலகப் போக்கின்படி தன்னை ஞானி எனக் கருதினால், ஞானியாகும்படி மடையனாகட்டும்.
|
19. ஏனெனில், இவ்வுலகத்தின் ஞானம் கடவுள் முன் மடமை தானே. ' ஞானிகளை அவர்களுடைய சூழ்ச்சியிலேயே சிக்க வைக்கிறார்' என்றும்,
|
23. வாழ்வோ, சாவோ, நிகழ்காலமோ எதிர்காலமோ எல்லாம் உங்களுக்கு உரியவையே. நீங்களோ கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.
|