தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 கொரிந்தியர்
1. சகோதரர்களே, ஆவியைப் பெற்றுக் கொண்டவர்களிடம் பேசுவது போல் உங்களிடம் பேச முடியவில்லை. ஊனியல்பு உள்ளவர்கள் போலவும், கிறிஸ்தவ வாழ்க்கையில் குழந்தைகள் போலவும், உங்களைப் பாவித்துப் பேச வேண்டியதாயிற்று.
2. உங்களுக்கு நான் ஊட்டியது பால் உணவே, கெட்டியான உணவன்று. அதை உண்ண முடியாதிருந்தீர்கள். இப்போதுங் கூட முடியாமல் தான் இருக்கிறீர்கள்.
3. ஏனெனில், இன்னும் ஊனியல்பு, உள்ளவர்களாகவே இருக்கிறீர்கள். உங்களிடையே பொறாமையும் சண்டை சச்சரவும் இருக்கையில் நீங்கள் ஊனியல்பு உள்ளவர்கள் தானே மேலும் மனித இயல்பு உள்ளவர்களாகத் தானே வாழ்கிறீர்கள்!
4. உங்களுள் ஒருவன், 'நான் சின்னப்பரைச் சேர்ந்தவன்' எனவும், வேறொருவன், ' நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன் ' எனவும் சொல்லும்போது நீங்கள் காட்டுவது வெறும் மனித இயல்பே அன்றோ?
5. ஆகிலும் அப்பொல்லோ யார்? சின்னப்பன் யார்? உங்களுக்கு விசுவாசம் கொண்டு வந்த வெறும் பணியாளர்களே அல்லரோ!
6. ஆண்டவர் அருளியவாறு அவனவன் பணியாற்றுகிறான். நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்;
7. ஆனால், விளையச் செய்தவர் கடவுள் தாமே. ஆதலின் நடுகிறவனுக்கு என்ன பெருமை? நீர் பாய்ச்சுபவனுக்கு என்ன பெருமை? விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை எல்லாம்.
8. நடுகிறவனும் நீர் பாய்ச்சுப்பவனும் ஒன்றுதான். ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்பத் தனக்குரிய கூலியைப் பெறுவான்.
9. ஏனெனில், நாங்கள் கடவுளோடு உழைப்பவர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் பண்ணை, கடவுள் எழுப்பும் கட்டடம்.
10. கடவுள் எனக்களித்த அருளுக்கேற்பக் கை தேர்ந்த கட்டடக் கலைஞனைப் போல் நான் அடித்தளம் இட்டேன். வேறொருவன் அதன் மேல் கட்டுகிறான். ஒவ்வொருவனும் தான் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாய் இருக்கவேண்டும்.
11. ஏனெனில், ஏற்கனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறு அடித்தளத்தை எவனும் இடக்கூடாது.
12. இந்த அடித்தளத்தின் மேல், பொன், வெள்ளி,. விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றாலோ, மரம், புல், வைக்கோல் ஆகியவற்றாலோ ஒருவன் கட்டடம் எழுப்பலாம்.
13. அவனவன் செய்த வேலை இறுதியில் தெரிந்துவிடும். இறுதி நாள் அதைக் காட்டி விடும். ஏனெனில், அது நெருப்பின் நாளாய் வெளிப்படும். அந்த நெருப்பு ஒவ்வொருவனுடைய வேலை எத்தன்மையது என்பதை எண்பித்துவிடும்.
14. கட்டிய கட்டடம் நிலைத்திருந்தால் கட்டியவன் கூலி பெறுவான். கட்டியது எரிந்து போனால், அது அவனுக்கு இழப்பாகும்.
15. அவனோ நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவன்போல் மீட்படைவான்.
16. நீங்கள் கடவுளின் ஆலயம் என்பதும், கடவுளின் ஆவி உங்களுள் குடிகொண்டிருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?
17. கடவுளின் ஆலயத்தை எவனாவது அழித்தால், அவனைக் கடவுள் அழித்து விடுவார். ஏனெனில், கடவுளின் ஆலயம் பரிசுத்தமானது. நீங்களே அவ்வாலயம்.
18. யாரும் ஏமாந்து போகக் கூடாது. உங்களுள் எவனாவது இவ்வுலகப் போக்கின்படி தன்னை ஞானி எனக் கருதினால், ஞானியாகும்படி மடையனாகட்டும்.
19. ஏனெனில், இவ்வுலகத்தின் ஞானம் கடவுள் முன் மடமை தானே. ' ஞானிகளை அவர்களுடைய சூழ்ச்சியிலேயே சிக்க வைக்கிறார்' என்றும்,
20. ' ஞானிகளின் எண்ணங்களை அறிவார், அவை வீண் என அவருக்குத் தெரியும் என்றும் எழுதியுள்ளதன்றோ?
21. ஆகையால் வெறும் மனிதர்களைப் பற்றி யாரும் பெருமை பாராட்டலாகாது.
22. சின்னப்பனோ, அப்பொல்லோவோ, கெபாவோ, உலகமோ,
23. வாழ்வோ, சாவோ, நிகழ்காலமோ எதிர்காலமோ எல்லாம் உங்களுக்கு உரியவையே. நீங்களோ கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 16 Chapters, Current Chapter 3 of Total Chapters 16
1 2 3 4 5 6 7 8 9 10 11
1 கொரிந்தியர் 3:12
1. சகோதரர்களே, ஆவியைப் பெற்றுக் கொண்டவர்களிடம் பேசுவது போல் உங்களிடம் பேச முடியவில்லை. ஊனியல்பு உள்ளவர்கள் போலவும், கிறிஸ்தவ வாழ்க்கையில் குழந்தைகள் போலவும், உங்களைப் பாவித்துப் பேச வேண்டியதாயிற்று.
2. உங்களுக்கு நான் ஊட்டியது பால் உணவே, கெட்டியான உணவன்று. அதை உண்ண முடியாதிருந்தீர்கள். இப்போதுங் கூட முடியாமல் தான் இருக்கிறீர்கள்.
3. ஏனெனில், இன்னும் ஊனியல்பு, உள்ளவர்களாகவே இருக்கிறீர்கள். உங்களிடையே பொறாமையும் சண்டை சச்சரவும் இருக்கையில் நீங்கள் ஊனியல்பு உள்ளவர்கள் தானே மேலும் மனித இயல்பு உள்ளவர்களாகத் தானே வாழ்கிறீர்கள்!
4. உங்களுள் ஒருவன், 'நான் சின்னப்பரைச் சேர்ந்தவன்' எனவும், வேறொருவன், ' நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன் ' எனவும் சொல்லும்போது நீங்கள் காட்டுவது வெறும் மனித இயல்பே அன்றோ?
5. ஆகிலும் அப்பொல்லோ யார்? சின்னப்பன் யார்? உங்களுக்கு விசுவாசம் கொண்டு வந்த வெறும் பணியாளர்களே அல்லரோ!
6. ஆண்டவர் அருளியவாறு அவனவன் பணியாற்றுகிறான். நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்;
7. ஆனால், விளையச் செய்தவர் கடவுள் தாமே. ஆதலின் நடுகிறவனுக்கு என்ன பெருமை? நீர் பாய்ச்சுபவனுக்கு என்ன பெருமை? விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை எல்லாம்.
8. நடுகிறவனும் நீர் பாய்ச்சுப்பவனும் ஒன்றுதான். ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்பத் தனக்குரிய கூலியைப் பெறுவான்.
9. ஏனெனில், நாங்கள் கடவுளோடு உழைப்பவர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் பண்ணை, கடவுள் எழுப்பும் கட்டடம்.
10. கடவுள் எனக்களித்த அருளுக்கேற்பக் கை தேர்ந்த கட்டடக் கலைஞனைப் போல் நான் அடித்தளம் இட்டேன். வேறொருவன் அதன் மேல் கட்டுகிறான். ஒவ்வொருவனும் தான் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாய் இருக்கவேண்டும்.
11. ஏனெனில், ஏற்கனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறு அடித்தளத்தை எவனும் இடக்கூடாது.
12. இந்த அடித்தளத்தின் மேல், பொன், வெள்ளி,. விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றாலோ, மரம், புல், வைக்கோல் ஆகியவற்றாலோ ஒருவன் கட்டடம் எழுப்பலாம்.
13. அவனவன் செய்த வேலை இறுதியில் தெரிந்துவிடும். இறுதி நாள் அதைக் காட்டி விடும். ஏனெனில், அது நெருப்பின் நாளாய் வெளிப்படும். அந்த நெருப்பு ஒவ்வொருவனுடைய வேலை எத்தன்மையது என்பதை எண்பித்துவிடும்.
14. கட்டிய கட்டடம் நிலைத்திருந்தால் கட்டியவன் கூலி பெறுவான். கட்டியது எரிந்து போனால், அது அவனுக்கு இழப்பாகும்.
15. அவனோ நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவன்போல் மீட்படைவான்.
16. நீங்கள் கடவுளின் ஆலயம் என்பதும், கடவுளின் ஆவி உங்களுள் குடிகொண்டிருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?
17. கடவுளின் ஆலயத்தை எவனாவது அழித்தால், அவனைக் கடவுள் அழித்து விடுவார். ஏனெனில், கடவுளின் ஆலயம் பரிசுத்தமானது. நீங்களே அவ்வாலயம்.
18. யாரும் ஏமாந்து போகக் கூடாது. உங்களுள் எவனாவது இவ்வுலகப் போக்கின்படி தன்னை ஞானி எனக் கருதினால், ஞானியாகும்படி மடையனாகட்டும்.
19. ஏனெனில், இவ்வுலகத்தின் ஞானம் கடவுள் முன் மடமை தானே. ' ஞானிகளை அவர்களுடைய சூழ்ச்சியிலேயே சிக்க வைக்கிறார்' என்றும்,
20. ' ஞானிகளின் எண்ணங்களை அறிவார், அவை வீண் என அவருக்குத் தெரியும் என்றும் எழுதியுள்ளதன்றோ?
21. ஆகையால் வெறும் மனிதர்களைப் பற்றி யாரும் பெருமை பாராட்டலாகாது.
22. சின்னப்பனோ, அப்பொல்லோவோ, கெபாவோ, உலகமோ,
23. வாழ்வோ, சாவோ, நிகழ்காலமோ எதிர்காலமோ எல்லாம் உங்களுக்கு உரியவையே. நீங்களோ கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.
Total 16 Chapters, Current Chapter 3 of Total Chapters 16
1 2 3 4 5 6 7 8 9 10 11
×

Alert

×

tamil Letters Keypad References