தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 கொரிந்தியர்
1. சகோதரர்களே, கடவுளின் மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது சிறந்த சொல் வன்மையையோ, ஞானத்தையோ காட்டிக் கொள்ளவில்லை.
2. ஏனெனில், நான் உங்களிடையே இருந்த போது இயேசு கிறிஸ்துவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையுண்ட அவரைத் தவிர வேறெதையும் அறிய விரும்பவில்லை.
3. உங்களோடு இருந்த போது வலுவற்றவனாய் மிகுந்த அச்ச நடுக்கத்தோடு இருந்தேன்.
4. நான் சொன்னதும் அறிவித்ததும் மனித ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை; ஆவியானவரும், அவரது வல்லமையும் தந்த அத்தாட்சியின் மீது அமைந்தன
5. உங்கள் விசுவாசம் மனிதர்களின் ஞானத்தில் ஊன்றியிராமல் கடவுளின் வல்லமையிலே ஊன்றியிருக்க வேண்டுமென்றே இவ்வாறாயிற்று.
6. எனினும், நிறைவு பெற்றவர்களிடையில் நாங்கள் ஞானத்தையே பேசுகிறோம். ஆனால் அது இவ்வுலகின் ஞானமன்று அழிவுக்குரிய இவ்வுலகத் தலைவர்களின் ஞானமுமன்று.
7. கடவுளின் ஞானத்தையே பேசுகிறோம். அதுவோ மறை பொருளான ஞானம், இது வரையில் அது மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அது நமது மகிமைக்காக உலகம் உண்டாகு முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது.
8. அதை இவ்வுலகின் தலைவர்களுள் யாரும் அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால் மாட்சிமை மிக்க ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்கவே மாட்டார்கள்.
9. நாங்கள் அறிவிப்பதோ மறைநூலில் எழுதியுள்ளவாறு, ' கண்ணுக்குப் புலப்படாதது, காதுக்கு எட்டாதது, மனித உள்ளத்தில் எழாதது. கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது'.
10. இதைக் கடவுள் தம் ஆவியின் வழியாய் நமக்கு வெளிப்படுத்தினார். ஆவியானவர் எல்லாவற்றையும் ஊடுருவிக் காண்கிறார். கடவுளுடைய உள்ளத்தின் ஆழத்தையும் காண்கிறார்.
11. மனிதனின் உள்ளத்தில் இருப்பதை மனிதனுக்குள் இருக்கும் அவன் ஆவியேயன்றி வேறு எவரும் அறியார். அவ்வாறே கடவுளின் உள்ளத்தில் இருப்பதைக் கடவுளின் ஆவியேயன்றி வேறெவரும் அறியார்.
12. நாம் பெற்றுக் கொண்டது இந்த உலகத்தின் மனப்பான்மையன்று, கடவுளிடமிருந்து வரும் ஆவியே, கடவுள் நமக்கு அருளியவற்றை அந்த ஆவியினால் உணரக் கூடும்.
13. அவற்றை நாங்கள் மனித ஞானம் கற்பிக்கும் சொற்களால் பேசாமல், ஆவியானவர் கற்பிக்கும் சொற்களால் பேசுகிறோம். இங்ஙனம், தேவ ஆவியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவிக்குரியவற்றை விளக்கியுரைக்கிறோம்.
14. மனித இயல்பால் மட்டும் இயங்குபவன் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. அவை அவனுக்கு மடமையாகத் தோன்றும். அவற்றை அவனால் அறியவும் இயலாது. ஏனெனில், தேவ ஆவியைக் கொண்டு தான் அவற்றை மதித்துணர முடியும்.
15. அந்த ஆவியைப் பெற்றுக் கொண்டவன் எல்லாவற்றையும் மதித்துணர்கிறான்.
16. அவனையோ, ஆவியைப் பெறாத எவனும் மதித்துணர முடியாது. 'ஆண்டவர் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை தரக்கூடியவர் யார்? ஆனால் நாம் கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 16 Chapters, Current Chapter 2 of Total Chapters 16
1 2 3 4 5 6 7 8 9 10
1 கொரிந்தியர் 2:17
1. சகோதரர்களே, கடவுளின் மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது சிறந்த சொல் வன்மையையோ, ஞானத்தையோ காட்டிக் கொள்ளவில்லை.
2. ஏனெனில், நான் உங்களிடையே இருந்த போது இயேசு கிறிஸ்துவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையுண்ட அவரைத் தவிர வேறெதையும் அறிய விரும்பவில்லை.
3. உங்களோடு இருந்த போது வலுவற்றவனாய் மிகுந்த அச்ச நடுக்கத்தோடு இருந்தேன்.
4. நான் சொன்னதும் அறிவித்ததும் மனித ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை; ஆவியானவரும், அவரது வல்லமையும் தந்த அத்தாட்சியின் மீது அமைந்தன
5. உங்கள் விசுவாசம் மனிதர்களின் ஞானத்தில் ஊன்றியிராமல் கடவுளின் வல்லமையிலே ஊன்றியிருக்க வேண்டுமென்றே இவ்வாறாயிற்று.
6. எனினும், நிறைவு பெற்றவர்களிடையில் நாங்கள் ஞானத்தையே பேசுகிறோம். ஆனால் அது இவ்வுலகின் ஞானமன்று அழிவுக்குரிய இவ்வுலகத் தலைவர்களின் ஞானமுமன்று.
7. கடவுளின் ஞானத்தையே பேசுகிறோம். அதுவோ மறை பொருளான ஞானம், இது வரையில் அது மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அது நமது மகிமைக்காக உலகம் உண்டாகு முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது.
8. அதை இவ்வுலகின் தலைவர்களுள் யாரும் அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால் மாட்சிமை மிக்க ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்கவே மாட்டார்கள்.
9. நாங்கள் அறிவிப்பதோ மறைநூலில் எழுதியுள்ளவாறு, ' கண்ணுக்குப் புலப்படாதது, காதுக்கு எட்டாதது, மனித உள்ளத்தில் எழாதது. கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது'.
10. இதைக் கடவுள் தம் ஆவியின் வழியாய் நமக்கு வெளிப்படுத்தினார். ஆவியானவர் எல்லாவற்றையும் ஊடுருவிக் காண்கிறார். கடவுளுடைய உள்ளத்தின் ஆழத்தையும் காண்கிறார்.
11. மனிதனின் உள்ளத்தில் இருப்பதை மனிதனுக்குள் இருக்கும் அவன் ஆவியேயன்றி வேறு எவரும் அறியார். அவ்வாறே கடவுளின் உள்ளத்தில் இருப்பதைக் கடவுளின் ஆவியேயன்றி வேறெவரும் அறியார்.
12. நாம் பெற்றுக் கொண்டது இந்த உலகத்தின் மனப்பான்மையன்று, கடவுளிடமிருந்து வரும் ஆவியே, கடவுள் நமக்கு அருளியவற்றை அந்த ஆவியினால் உணரக் கூடும்.
13. அவற்றை நாங்கள் மனித ஞானம் கற்பிக்கும் சொற்களால் பேசாமல், ஆவியானவர் கற்பிக்கும் சொற்களால் பேசுகிறோம். இங்ஙனம், தேவ ஆவியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவிக்குரியவற்றை விளக்கியுரைக்கிறோம்.
14. மனித இயல்பால் மட்டும் இயங்குபவன் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. அவை அவனுக்கு மடமையாகத் தோன்றும். அவற்றை அவனால் அறியவும் இயலாது. ஏனெனில், தேவ ஆவியைக் கொண்டு தான் அவற்றை மதித்துணர முடியும்.
15. அந்த ஆவியைப் பெற்றுக் கொண்டவன் எல்லாவற்றையும் மதித்துணர்கிறான்.
16. அவனையோ, ஆவியைப் பெறாத எவனும் மதித்துணர முடியாது. 'ஆண்டவர் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை தரக்கூடியவர் யார்? ஆனால் நாம் கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.
Total 16 Chapters, Current Chapter 2 of Total Chapters 16
1 2 3 4 5 6 7 8 9 10
×

Alert

×

tamil Letters Keypad References