1. அன்பை நாடுங்கள்; அதன் பின் ஆவிக்குரிய வரங்களை ஆவலோடு தேடலாம்; சிறப்பாக இறைவாக்கு வரத்தை விரும்புங்கள்.
|
2. எனெனில், பரவசப் பேச்சுப் பேசுகிறவன் மனிதர்களிடம் பேசுவதில்லை; கடவுளிடமே பேசுகிறான்; அவன் பேசுவதை யாருமே புரிந்து கொள்வதில்லை; ஆவியின் ஏவுதலால் மறைபொருள்களையே பேசுகிறான்.
|
3. இறைவாக்கு உரைப்பவனோ மனிதர்களிடம் பேசுகிறான்; அவன் உரைப்பது ஞான வளர்ச்சி தருகிறது; ஊக்கம் ஊட்டுகிறது; ஆறுதல் அளிக்கிறது.
|
4. பரவசப் பேச்சுப் பேசுபவன் தான் மட்டும் ஞான வளர்ச்சி பெறுகிறான்; ஆனால், இறைவாக்கு உரைப்போன் திருச்சபை ஞான வளர்ச்சிப் பெறச் செய்கிறான்.
|
5. நீங்கள் எல்லாரும் பரவசப் பேச்சுத் தாராளமாய்ப் பேசலாம்; ஆனால், அதைவிட நீங்கள் இறைவாக்கு உரைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். பரவசப் பேச்சுப் பேசுகிறவன் திருச்சபை ஞான வளர்ச்சியடையும் படி விளக்கமும் கூறினாலொழிய அவனைவிட இறைவாக்குரைப்பவனே மேலானவன்.
|
6. சகோதரர்களே, நான் உங்களிடம் வந்து,. உங்களுக்குத் திருவெளிப்பாடு, ஞான அறிவு, இறைவாக்கு, போதனை இவற்றில் ஒன்றையேனும் எடுத்துச் சொல்லாமல் பரவசப்பேச்சு மட்டும் பேசினால், உங்களுக்குப் பயன் என்ன?
|
7. குழல் அல்லது யாழ் போன்ற உயிரற்ற இசைக்கருவிகளை எடுத்துக் கொள்வோம் அவை வேறுபட்ட ஓசையை எழுப்பாவிடில், குழலோசையையும் யாழிசையும் அறிவதெப்படி?
|
9. அவ்வாறே நீங்களும் பரவசப் பேச்சுப் பேசும்போது தெளிவாகப் பேசாவிட்டால், நீங்கள் சொல்வது விளங்குவதெப்படி? உங்கள் பேச்சு காற்றோடு போய் விடும்.
|
12. ஆதலால் ஆவிக்குரிய வரங்களை ஆர்வமாய்த் தேடும் நீங்கள் திருச்சபைக்கு ஞான வளர்ச்சி தரும் வரங்களில் மேன்மையடைய முயலுங்கள்.
|
14. ஏனெனில், நான் பரவசப் பேச்சில் செபம் செய்தால், என் ஆவி எனக்குள் செபம் செய்யும், என் மனமோ பயன் பெறாது.
|
15. அப்படியானால் செய்யவேண்டியதென்ன? ஆவியாலும் செபிக்கவேண்டும், மனத்தாலும் செபிக்க வேண்டும். ஆவியாலும் புகழ்பாட வேண்டும், மனத்தாலும் புகழ் பாடவேண்டும்.
|
16. இல்லையேல், நீ ஆவியால் இறைபுகழ் கூறும்போது, சபையில் அமர்ந்திருக்கும் பொதுமக்கள் உனது நன்றிச் செபத்திற்கு எவ்வாறு ' ஆமென் ' எனச் சொல்லுவார்கள்? நீ பேசுவது அவர்களுக்குப் புரியவில்லையே!
|
19. ஆனாலும் நான் சபையிலே பேசினால் பரவசப் பேச்சில் பத்தாயிரம் சொற்கள் பேசுவதைவிட , மற்றவர்களுக்குக் கற்பிக்க அறிவுத் தெளிவோடு நாலைந்து சொல் மட்டுமே பேசுவதை விரும்புவேன்
|
20. சகோதரர்களே, அறிவுத் திறனில் குழந்தைகளாய் இராதீர்கள்; தீமையிலே குழந்தைகளாயும், அறிவுத் திறனில் முதிர்ந்தவர்களாயும் இருங்கள்.
|
21. ' வேற்று மொழியினர் வாயிலாகவும் வேற்றினத்தார் வாய்ச்சொல்லாலும் இந்த மக்களிடம் பேசுவேன். அப்பொழுதும் அவர்கள் எனக்குச் செவி கொடுக்க மாட்டார்கள் என்கிறார் ஆண்டவர் ' என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.
|
22. ஆகவே பரவசப் பேச்சு விசுவாசிகளுக்கன்று, அவிசுவாசிகளுக்கே அடையாளமாய் உள்ளது. இறைவாக்கோ அவிசுவாசிகளுக்கன்று, விசுவாசிகளுக்கே அடையாளமாய் உள்ளது.
|
23. அப்படியிருக்க, முழுச்சபையும் ஒன்றாகக் கூடும்பொழுது, எல்லாரும் பரவசப் பேச்சுப் பேசினால், அங்கே வரும் பொதுமக்களோ அவிசுவாசிகளோ உங்களைப் பைத்தியக்காரர் என்று சொல்ல மாட்டார்களா?
|
24. ஆனால் எல்லாரும் இறைவாக்கு உரைக்கும்போது, அவிசுவாசியோ, பொதுமக்களுள் ஒருவனோ அங்கே வந்தால், அனைவரும் கூறுவது, அவனுடைய மனச்சாட்சியின் நிலையை எடுத்துக்காட்டி, அவனைத் தீர்ப்புக்கு உட்படுத்துகிறது.
|
25. அவனது உள்ளத்தில் மறைந்திருப்பது வெளிப்படும். அப்பொழுது அவன் குப்புற விழுந்து, கடவுளைத் தொழுது, ' உண்மையாகவே கடவுள் உங்களிடையில் உள்ளார் ' என அறிக்கையிடுவான்.
|
26. அப்படியானால், சகோதரர்களே, என்ன முடிவு செய்வது? நீங்கள் கூடிவரும்பொழுது. உங்களுள் ஒருவன் புகழ் பாடுவதாகவோ, போதனை செய்வதாகவோ, திருவெளிப்பாடு உரைப்பதாகவோ, பரவசப் பேச்சுப் பேசுவதாகவோ, விளக்கம் கூறுவதாகவோ இருந்தால், எல்லாம் ஞானவளர்ச்சி தர நடை பெறட்டும்.
|
27. பரவசப் பேச்சுப் பேசுவதாயிருந்தால், இருவர் பேசலாம்; மிஞ்சினால் மூவர் பேசலாம். ஆயினும் ஒருவர் பின் ஒருவராகப் பேசவேண்டும்; ஒருவன் விளக்கம் கூறட்டும்.
|
28. விளக்கம் கூறுபவன் இல்லாவிட்டால், அவர்கள் சபையில் பேசாதிருக்கட்டும்; தனக்குள் கடவுளோடு உரையாடட்டும்.
|
30. சபையில் அமைந்திருக்கும் ஒருவனுக்குத் திருவெளிப்பாடு அருளப்பட்டால் முன்னர் பேசிக்கொண்டிருந்தவன் நிறுத்திக்கொள்ளட்டும்.
|
31. நீங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறைவாக்குரைக்கலாம்; அப்போதுதான் எல்லாரும் கற்றுக் கொள்ளவும், ஊக்கம் பெறவும் இயலும்.
|
33. ஏனெனில் கடவுள் குழப்பத்தின் கடவுளல்லர், அமைதியின் கடவுளே. இறை மக்களின் எல்லாச் சபைகளிலும் நடப்பதுபோல், சபையில் பெண்கள் பேசாதிருக்க வேண்டும்..
|
35. அவர்கள் ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால் வீட்டிலே தங்கள் கணவரைக் கேட்டுக்கொள்ளட்டும். ஏனெனில் சபையில் பேசுவது பெண்களுக்கு அழகன்று.
|
37. உங்களிடம் மட்டுமா வந்தது? ஒருவன் தான் இறைவாக்கினன் என்றோ, ஆவியின் ஏவுதல் பெற்றவன் என்றோ எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுவது ஆண்டவருடைய கட்டளை என அவன் ஒத்துக்கொள்வானாக.
|
39. ஆகையால் சகோதரர்களே, இறைவாக்குரைப்பதையே ஆர்வமாய்த் தேடுங்கள்; பரவசப் பேச்சுப் பேசுவதையும் தடுக்காதீர்கள்.
|