2. எல்லாவற்றிலும் என்னை நினைவுகூர்ந்து, நான் உங்களிடம் கையளித்ததையெல்லாம் கையளித்தவாறே நீங்கள் கடைபிடித்து வருவதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.
|
3. ஆனால் நீங்கள் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். ஆணுக்குக் தலையாய் இருப்பவர் கிறிஸ்து பெண்ணுக்குத் தலையாய் இருப்பவன் ஆண், கிறிஸ்துவுக்குத் தலையாய் இருப்பவர் கடவுள்.
|
4. செபிக்கும்போது அல்லது இறைவாக்குக் கூறும்போது தன் தலையை மூடிக்கொள்ளும் ஆண் எவனும் தன் தலையை இழிவுபடுத்துகிறான்.
|
5. ஆனால் செபிக்கும்போது அல்லது இறைவாக்குக் கூறும்போது தலைக்கு முக்காடிடாத பெண் எவளும் தன் தலையை இழிவுபடுத்துகிறாள். அது அவள் தலையை மழித்துவிட்டதுபோலாகும்.
|
6. பெண்கள் முக்காடிடவில்லையானால், கூந்தலை வெட்டிவிடட்டும். கூந்தலை வெட்டிவிடுவதோ, மழித்துவிடுவதோ பெண்ணுக்கு இழிவு என்றால் தலைக்கு முக்காடிட்டுக்கொள்ளட்டும்.
|
7. ஆண்மகன் தலையை மூடிக்கொள்ளலாகாது. ஏனெனில், அவன் கடவுளின் சாயலும், அவரது மாட்சியின் எதிரொளியும் ஆவான்.
|
8. பெண்ணோ ஆணின் மாட்சிக்கு எதிரொளி. ஏனெனில், பெண்ணிலிருந்து ஆண் தோன்றவில்லை; ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்.
|
10. ஆகையால் வானதூதர்களை முன்னிட்டு, பெண் தன் தலையின் மேல் பெண்மைக்குரிய பெருமையின் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும்,.
|
11. ஆயினும் கிறிஸ்துவ ஒழுங்கு முறையில் பெண் இனம் இன்றி, ஆண் இனம் இல்லை. ஆண் இனம் இன்றிப் பெண் இனம் இல்லை.
|
12. ஏனெனில், ஆணிடமிருந்து பெண் தோன்றியவாறே பெண்ணின் வழியாய் ஆணும் தோன்றுகிறான்; ஆனால் யாவும் கடவுளிடமிருந்து தான் வருகின்றன.
|
14. ஆண் நீண்ட முடி வளர்ப்பது அவனுக்கு இழிவு என்றும், பெண் கூந்தலை வளர்ப்பது அவளுக்குப் பெருமை என்றும் இயற்கையே உங்களுக்குக் கற்பிக்க வில்லையா?
|
16. இதைப்பற்றி வாக்குவாதம் செய்ய நினைப்பவனுக்கு நான் சொல்வது: அத்தகைய வழக்கம் எங்கள் நடுவிலும் இல்லை; கடவுளின் எந்தச் சபையிலும் இல்லை.
|
17. இந்த அறிவுரைகளை நான் கூறும்போது வேறொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்; அது உங்களுக்குப் பெருமை தராது. நீங்கள் ஒன்று கூடும்போது உங்களுக்கு நன்மையை விடத் தீமையே விளைகிறது.
|
18. முதலாவதாக, நீங்கள் சபையில் கூடும்போது உங்கள் நடுவில் பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஓரளவு அந்தச் செய்தியை நம்புகிறேன்.
|
19. உங்கள் நடுவில் பிரிவினைகள் உண்டாகத் தான் செய்யும். அதனால் உங்களுள் தகுதியுடையோர் யாரனெத் தெரியவரும்-.
|
21. ஏனெனில், நீங்கள் உண்ணும்போது, ஒவ்வொருவனும் உண்பதற்கு முந்திக்கொள்வதால் ஒருவன் பசியாய் இருக்கிறான். வேறொருவன் குடிவெறி கொள்கிறான்.
|
22. உண்டு குடிக்க உங்களுக்கு வீடு இல்லையா? அல்லது இல்லாதவர்களை நாணச்செய்து கடவுளின் சபையை இழிவுபடுத்துகிறீர்களா? என்ன சொல்வது உங்களைப் புகழ்வதா? இதில் உங்களை எப்படிப் புகழ்வது?
|
23. ஏனெனில், நான் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டது இதுவே - அதையே நான் உங்களுக்குக் கையளித்தேன் அதாவது, ஆண்டவராகிய இயேசு, தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில் அப்பத்தை எடுத்து, நன்றி கூறி அதைப் பிட்டு:
|
25. அவ்வாறே உணவு அருந்திய பின் கிண்ணத்தையும் எடுத்து ' இக்கிண்ணம் எனது இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை. இதைப் பருகும் போதெல்லாம் என் நினைவாகச் செய்யுங்கள்' என்றார்.
|
26. எனவே, நீங்கள் இந்த அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவர் வரும் வரையில் அவரது மரணத்தை அறிக்கையிடுகிறீர்கள்.
|
27. ஆதலால், எவனாவது இந்த அப்பத்தைத் தகுதியின்றி உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் ஆண்டவருடைய உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறாள்.
|
28. ஆகவே, ஒவ்வொருவனும் தன்னுளத்தை ஆய்ந்தறிந்து, அதன் பின்னரே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகட்டும்.
|
32. அப்படியே ஆண்டவரின் தீர்ப்புக்குள்ளானாலும், அவர் நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார் என்பதே கருத்து. இவ்வுலகத்தோடு நாமும் அழிவுத்தீர்ப்பை அடையாதிருக்கவே அவ்வாறு செய்கிறார்.
|
34. பசிக்கு உண்பதானால் வீட்டிலேயே உண்ணுங்கள்; அப்போது, நீங்கள் கூடிவருவது தண்டனைத் தீர்ப்புக்கு உரியதாய் இராது. மற்றதெல்லாம் நான் வரும்போது ஒழுங்குபடுத்துகிறேன்.
|