தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 நாளாகமம்
1. தாவீது அரசர் சபையார் எல்லாரையும் நோக்கி, "கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட என் மகன் சாலமோன் இன்னும் இளைஞனும் அனுபவமில்லதாவனுமாய் இருக்கிறான். செய்யவேண்டிய பணியோ மிகவும் பெரிது. கட்டப்படவிருக்கும் வீடு ஒரு மனிதனுக்காக அன்று, ஆண்டவராகிய கடவுளுக்காகவேயாம்.
2. நானோ என்னால் இயன்றவரை என் கடவுளின் ஆலயத்துக்கென்று பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு வேலைகளுக்குத் தேவையான பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு முதலியவற்றையும், மரவேலைகளுக்குத் தேவையான மரங்களையும், கோமேதகக் கற்களையும் வேலைப்பாடுகள் உள்ள கற்களையும், பல வர்ணக்கற்களையும், மாணிக்கக் கற்களையும், பாரோஸ் என்னும் சலவைக் கற்களையும் ஏராளமாகச் சேர்த்து வைத்துள்ளேன்.
3. அப்புனித ஆலயத்திற்கென்று நான் சேகரித்து வைத்துள்ள அவற்றையும் நான் கொடுத்த தானங்களையும் தவிர, என் கடவுளின் மாளிகைக்கு என் கையிலிருந்து பொன்னும் வெள்ளியும் இதோ தருகிறேன்.
4. ஆலயச் சுவர்களை மூடுவதற்காக மூவாயிரம் தாலந்து தூய்மையான வெள்ளியும் கொடுக்கிறேன்.
5. மற்றும் பொன், வெள்ளி வேலைகளுக்கு வேண்டிய பொன்னும் வெள்ளியும் தருகிறேன். இவ்வேலைகள் எல்லாம் திறமை பெற்ற தட்டார்களால் செய்யப்பட வேண்டும். எவனும் ஆண்டவருக்குக் காணிக்கை தர விரும்பினால், இன்றே அவன் தனக்கு விருப்பமானதைத் தன் கைநிறையக் கொணர்ந்து ஆண்டவருக்குச் செலுத்தக் கடவான்" என்றார்.
6. அப்பொழுது, குடும்பத்தலைவர்களும் இஸ்ராயேல் குலத்தலைவர்களும் ஆயிரவர், நூற்றுவர்தலைவர்களும் அரசரின் உடைமைகளைக் கண்காணித்து வந்த அதிகாரிகளும் காணிக்கைகளைக் கொண்டு வந்தனர்.
7. அதன்படி கடவுளின் ஆலய வேலைகளுக்காக ஐயாயிரம் தாலந்து பொன்னும், பதினாயிரம் பொற்காசுகளும், பதினாயிரம் தாலந்து வெள்ளியும் பதினெட்டாயிரம் தாலந்து வெண்கலமும், ஒரு லட்சம் தாலந்து இரும்பும் கொடுத்தனர்.
8. மாணிக்கக் கற்களை வைத்திருந்தவர்கள் எல்லாரும் அவற்றை ஆண்டவரின் ஆலயக் கருவூலத்துக்கென்று கெர்சோனியனாகிய யாகியேலின் கையில் ஒப்படைத்தனர்.
9. இவ்வாறு மனமுவந்து அளிப்பதில் மக்கள் மகிழ்வுற்றனர். ஏனெனில் முழு இதயத்தோடும் ஆண்டவருக்கு அவற்றை அவர்கள் ஒப்புக்கொடுத்தனர். தாவீது அரசரும் பெரிதும் மகிழ்ந்தார்.
10. அங்கிருந்த மக்கட் கூட்டத்தின் முன்பாக அவர் ஆண்டவரை வாழ்த்தி, "எங்கள் தந்தையாகிய இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப்பெறுவீர்.
11. ஆண்டவரே, பெருமையும் மகிமையும் வல்லமையும் வெற்றியும் உமக்கே உரியன. புகழும் உமக்கே உரியது. விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தும் உம்முடையதே. அரசும் உம்முடையதே. ஆண்டவரே, நீரே மன்னருக்கு மன்னர், செல்வமும் மகிமையும் உம்முடையன.
12. அனைத்தையும் நீரே ஆள்கின்றீர். உமது கரத்தில் ஆற்றலும் வல்லமையும் உண்டு. எல்லாப் பெருமையும் ஆற்றலும் உம் கரங்களிலே இருக்கின்றன.
13. ஆதலால், எங்கள் கடவுளே, உமக்கு நன்றி கூறி, உம் திருப்பெயரை வாழ்த்துகிறோம்.
14. இவற்றை எல்லாம் உமக்குக் கொடுக்க நான் யார்? என் குடிகளுக்கும் என்ன உரிமை இருக்கிறது? எல்லாம் உம்முடையன. உம் கைகளினின்று நாங்கள் பெற்றுக்கொண்டதையே உமக்குத் திரும்பக் கொடுத்துள்ளோம்.
15. உம் திருமுன் நாங்கள் எங்கள் முன்னோரைப் போலவே அந்நியரும் வழிப்போக்கருமாய் இருக்கிறோம். எங்கள் உலக வாழ்வு ஒரு நிழல் போன்றது, நிலையற்றது.
16. எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உமது திருப்பெயருக்கு ஓர் ஆலயம் கட்டுவதற்கு நாங்கள் தயாரித்திருக்கும் இந்தப் பொருட்களெல்லாம் உமது கரத்தினின்று வந்தவையே. எல்லாம் உம்முடையனவே.
17. என் கடவுளே, நீர் இதயச் சிந்தனைகளை அறிகிறவர் என்றும், நேர்மையை விரும்புகிறவர் என்றும் நான் அறிவேன். ஆகையால், இதய நேர்மையுடன் இவற்றை எல்லாம் மகிழ்வுடன் ஒப்புக்கொடுத்தேன். இங்கே கூடியிருக்கிற உம் மக்கள் உமக்குக் காணிக்கைகளை மனப் பூர்வமாய் ஒப்புகொடுக்கக் கண்டு மகிழ்ந்தேன்.
18. எங்கள் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக், இஸ்ராயேல் ஆகியோரின் கடவுளாகிய ஆண்டவரே! உம் மக்களின் இதயச் சிந்தனைகளை உம்மை நோக்கித் திருப்பியருளும்.
19. என் மகன் சாலமோன் உம் கட்டளைகளையும் சாட்சியங்களையும் வழிபாட்டு முறைகளையும் பின் பற்றி ஒழுகவும், ஆலயத்தைக் கட்டவும் அவனுக்கு உத்தம இதயத்தை அளித்தருளும். அந்த ஆலயத்தின் வேலைக்காகவே நான் இவற்றை எல்லாம் தயார் செய்துள்ளேன்" என்று வேண்டினார்.
20. பிறகு தாவீது சபை அனைத்தையும் நோக்கி, "நீங்கள் நம் கடவுளாகிய ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்" என்று கட்டளையிட்டார். உடனே அங்குக் கூடியிருந்த அனைவரும் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரை ஆராதித்தனர். அதன்பின் அரசரையும் வணங்கினர்.
21. ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தினர். மறுநாள் தகனப் பலிகளாக ஆயிரம் காளைகளையும் ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும் ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஒப்புக்கொடுத்தனர்; அவற்றோடு பானப்பலிகளையும் சடங்கு முறைப்படி இஸ்ராயேல் மக்கள் அனைவருக்காகவும் தாராள மனத்துடன் செலுத்தினர்.
22. அவர்கள் அன்று ஆண்டவர் திருமுன் உண்டு குடித்து மகிழ்ச்சி கொண்டாடினர். இரண்டாம் முறையாக மகன் சாலமோனை அரசராகவும், சாதோக்கைக் குருவாகவும் அபிஷுகம் செய்தனர்.
23. அவ்வாறே சாலமோன் தம் தந்தை தாவீதுக்குப் பதிலாய் ஆண்டவரின் அரியணையில் அரசராய் அமர்ந்தார். வெற்றியுடன் ஆட்சிபுரிந்து வந்தார். இஸ்ராயேல் மக்கள் அனைவரும் அவரை விரும்பி அவருக்குக் கீழ்ப்படிந்தனர்.
24. மக்கள் தலைவர்கள் அனைவரும், ஆற்றல் நிறை வீரர்களும், தாவீது அரசரின் புதல்வர்கள் எல்லாரும் சாலமோன் அரசருக்கு மனமுவந்து அடிபணிந்தனர்.
25. இவ்வாறு ஆண்டவர் சாலமோனை இஸ்ராயேலர் அனைவருக்கும் மேலாக உயர்த்தினார். அதற்குமுன் இருந்த இஸ்ராயேல் அரசர் எவருக்குமில்லாத அரச மகிமையை அவருக்குக் கொடுத்தார்.
26. இசாயியின் மகன் தாவீது இஸ்ராயேலர் அனைவரையும் ஆண்டு வந்தார்.
27. அவரது ஆட்சிகாலம் நாற்பது ஆண்டுகள். எபிரோனில் ஏழு ஆண்டுகளும், யெருசலேமில் முப்பத்து முன்று ஆண்டுகளும் அவர் அரசோச்சினார்.
28. பின் முதிர்ந்த வயதினராய், செல்வமும் புகழும் நிறைந்தவராய் உயிர் நீத்தார். அவருடைய மகன் சாலமோன் அவருக்குப் பின் அரியணை ஏறினார்.
29. தாவீது அரசரின் வரலாறு முழுவதும், அவர் ஆட்சிகாலத்தில் அவர்புரிந்த ஆற்றல் மிக்க செயல்களும், இஸ்ராயேலிலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் நிகழ்ந்தன யாவும்,
30. (29b) திருக்காட்சியாளரான சாமுவேல், இறைவாக்கினரான நாத்தான், திருக்காட்சியாளரான காத் ஆகியோரின் நூல்களில் எழுதப்பட்டுள்ளன.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 29 Chapters, Current Chapter 29 of Total Chapters 29
1 நாளாகமம் 29:19
1. தாவீது அரசர் சபையார் எல்லாரையும் நோக்கி, "கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட என் மகன் சாலமோன் இன்னும் இளைஞனும் அனுபவமில்லதாவனுமாய் இருக்கிறான். செய்யவேண்டிய பணியோ மிகவும் பெரிது. கட்டப்படவிருக்கும் வீடு ஒரு மனிதனுக்காக அன்று, ஆண்டவராகிய கடவுளுக்காகவேயாம்.
2. நானோ என்னால் இயன்றவரை என் கடவுளின் ஆலயத்துக்கென்று பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு வேலைகளுக்குத் தேவையான பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு முதலியவற்றையும், மரவேலைகளுக்குத் தேவையான மரங்களையும், கோமேதகக் கற்களையும் வேலைப்பாடுகள் உள்ள கற்களையும், பல வர்ணக்கற்களையும், மாணிக்கக் கற்களையும், பாரோஸ் என்னும் சலவைக் கற்களையும் ஏராளமாகச் சேர்த்து வைத்துள்ளேன்.
3. அப்புனித ஆலயத்திற்கென்று நான் சேகரித்து வைத்துள்ள அவற்றையும் நான் கொடுத்த தானங்களையும் தவிர, என் கடவுளின் மாளிகைக்கு என் கையிலிருந்து பொன்னும் வெள்ளியும் இதோ தருகிறேன்.
4. ஆலயச் சுவர்களை மூடுவதற்காக மூவாயிரம் தாலந்து தூய்மையான வெள்ளியும் கொடுக்கிறேன்.
5. மற்றும் பொன், வெள்ளி வேலைகளுக்கு வேண்டிய பொன்னும் வெள்ளியும் தருகிறேன். இவ்வேலைகள் எல்லாம் திறமை பெற்ற தட்டார்களால் செய்யப்பட வேண்டும். எவனும் ஆண்டவருக்குக் காணிக்கை தர விரும்பினால், இன்றே அவன் தனக்கு விருப்பமானதைத் தன் கைநிறையக் கொணர்ந்து ஆண்டவருக்குச் செலுத்தக் கடவான்" என்றார்.
6. அப்பொழுது, குடும்பத்தலைவர்களும் இஸ்ராயேல் குலத்தலைவர்களும் ஆயிரவர், நூற்றுவர்தலைவர்களும் அரசரின் உடைமைகளைக் கண்காணித்து வந்த அதிகாரிகளும் காணிக்கைகளைக் கொண்டு வந்தனர்.
7. அதன்படி கடவுளின் ஆலய வேலைகளுக்காக ஐயாயிரம் தாலந்து பொன்னும், பதினாயிரம் பொற்காசுகளும், பதினாயிரம் தாலந்து வெள்ளியும் பதினெட்டாயிரம் தாலந்து வெண்கலமும், ஒரு லட்சம் தாலந்து இரும்பும் கொடுத்தனர்.
8. மாணிக்கக் கற்களை வைத்திருந்தவர்கள் எல்லாரும் அவற்றை ஆண்டவரின் ஆலயக் கருவூலத்துக்கென்று கெர்சோனியனாகிய யாகியேலின் கையில் ஒப்படைத்தனர்.
9. இவ்வாறு மனமுவந்து அளிப்பதில் மக்கள் மகிழ்வுற்றனர். ஏனெனில் முழு இதயத்தோடும் ஆண்டவருக்கு அவற்றை அவர்கள் ஒப்புக்கொடுத்தனர். தாவீது அரசரும் பெரிதும் மகிழ்ந்தார்.
10. அங்கிருந்த மக்கட் கூட்டத்தின் முன்பாக அவர் ஆண்டவரை வாழ்த்தி, "எங்கள் தந்தையாகிய இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப்பெறுவீர்.
11. ஆண்டவரே, பெருமையும் மகிமையும் வல்லமையும் வெற்றியும் உமக்கே உரியன. புகழும் உமக்கே உரியது. விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தும் உம்முடையதே. அரசும் உம்முடையதே. ஆண்டவரே, நீரே மன்னருக்கு மன்னர், செல்வமும் மகிமையும் உம்முடையன.
12. அனைத்தையும் நீரே ஆள்கின்றீர். உமது கரத்தில் ஆற்றலும் வல்லமையும் உண்டு. எல்லாப் பெருமையும் ஆற்றலும் உம் கரங்களிலே இருக்கின்றன.
13. ஆதலால், எங்கள் கடவுளே, உமக்கு நன்றி கூறி, உம் திருப்பெயரை வாழ்த்துகிறோம்.
14. இவற்றை எல்லாம் உமக்குக் கொடுக்க நான் யார்? என் குடிகளுக்கும் என்ன உரிமை இருக்கிறது? எல்லாம் உம்முடையன. உம் கைகளினின்று நாங்கள் பெற்றுக்கொண்டதையே உமக்குத் திரும்பக் கொடுத்துள்ளோம்.
15. உம் திருமுன் நாங்கள் எங்கள் முன்னோரைப் போலவே அந்நியரும் வழிப்போக்கருமாய் இருக்கிறோம். எங்கள் உலக வாழ்வு ஒரு நிழல் போன்றது, நிலையற்றது.
16. எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உமது திருப்பெயருக்கு ஓர் ஆலயம் கட்டுவதற்கு நாங்கள் தயாரித்திருக்கும் இந்தப் பொருட்களெல்லாம் உமது கரத்தினின்று வந்தவையே. எல்லாம் உம்முடையனவே.
17. என் கடவுளே, நீர் இதயச் சிந்தனைகளை அறிகிறவர் என்றும், நேர்மையை விரும்புகிறவர் என்றும் நான் அறிவேன். ஆகையால், இதய நேர்மையுடன் இவற்றை எல்லாம் மகிழ்வுடன் ஒப்புக்கொடுத்தேன். இங்கே கூடியிருக்கிற உம் மக்கள் உமக்குக் காணிக்கைகளை மனப் பூர்வமாய் ஒப்புகொடுக்கக் கண்டு மகிழ்ந்தேன்.
18. எங்கள் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக், இஸ்ராயேல் ஆகியோரின் கடவுளாகிய ஆண்டவரே! உம் மக்களின் இதயச் சிந்தனைகளை உம்மை நோக்கித் திருப்பியருளும்.
19. என் மகன் சாலமோன் உம் கட்டளைகளையும் சாட்சியங்களையும் வழிபாட்டு முறைகளையும் பின் பற்றி ஒழுகவும், ஆலயத்தைக் கட்டவும் அவனுக்கு உத்தம இதயத்தை அளித்தருளும். அந்த ஆலயத்தின் வேலைக்காகவே நான் இவற்றை எல்லாம் தயார் செய்துள்ளேன்" என்று வேண்டினார்.
20. பிறகு தாவீது சபை அனைத்தையும் நோக்கி, "நீங்கள் நம் கடவுளாகிய ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்" என்று கட்டளையிட்டார். உடனே அங்குக் கூடியிருந்த அனைவரும் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரை ஆராதித்தனர். அதன்பின் அரசரையும் வணங்கினர்.
21. ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தினர். மறுநாள் தகனப் பலிகளாக ஆயிரம் காளைகளையும் ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும் ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஒப்புக்கொடுத்தனர்; அவற்றோடு பானப்பலிகளையும் சடங்கு முறைப்படி இஸ்ராயேல் மக்கள் அனைவருக்காகவும் தாராள மனத்துடன் செலுத்தினர்.
22. அவர்கள் அன்று ஆண்டவர் திருமுன் உண்டு குடித்து மகிழ்ச்சி கொண்டாடினர். இரண்டாம் முறையாக மகன் சாலமோனை அரசராகவும், சாதோக்கைக் குருவாகவும் அபிஷுகம் செய்தனர்.
23. அவ்வாறே சாலமோன் தம் தந்தை தாவீதுக்குப் பதிலாய் ஆண்டவரின் அரியணையில் அரசராய் அமர்ந்தார். வெற்றியுடன் ஆட்சிபுரிந்து வந்தார். இஸ்ராயேல் மக்கள் அனைவரும் அவரை விரும்பி அவருக்குக் கீழ்ப்படிந்தனர்.
24. மக்கள் தலைவர்கள் அனைவரும், ஆற்றல் நிறை வீரர்களும், தாவீது அரசரின் புதல்வர்கள் எல்லாரும் சாலமோன் அரசருக்கு மனமுவந்து அடிபணிந்தனர்.
25. இவ்வாறு ஆண்டவர் சாலமோனை இஸ்ராயேலர் அனைவருக்கும் மேலாக உயர்த்தினார். அதற்குமுன் இருந்த இஸ்ராயேல் அரசர் எவருக்குமில்லாத அரச மகிமையை அவருக்குக் கொடுத்தார்.
26. இசாயியின் மகன் தாவீது இஸ்ராயேலர் அனைவரையும் ஆண்டு வந்தார்.
27. அவரது ஆட்சிகாலம் நாற்பது ஆண்டுகள். எபிரோனில் ஏழு ஆண்டுகளும், யெருசலேமில் முப்பத்து முன்று ஆண்டுகளும் அவர் அரசோச்சினார்.
28. பின் முதிர்ந்த வயதினராய், செல்வமும் புகழும் நிறைந்தவராய் உயிர் நீத்தார். அவருடைய மகன் சாலமோன் அவருக்குப் பின் அரியணை ஏறினார்.
29. தாவீது அரசரின் வரலாறு முழுவதும், அவர் ஆட்சிகாலத்தில் அவர்புரிந்த ஆற்றல் மிக்க செயல்களும், இஸ்ராயேலிலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் நிகழ்ந்தன யாவும்,
30. (29b) திருக்காட்சியாளரான சாமுவேல், இறைவாக்கினரான நாத்தான், திருக்காட்சியாளரான காத் ஆகியோரின் நூல்களில் எழுதப்பட்டுள்ளன.
Total 29 Chapters, Current Chapter 29 of Total Chapters 29
×

Alert

×

tamil Letters Keypad References