தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 நாளாகமம்
1. தாவீது இஸ்ராயேலின் தலைவர்களையும் குலத்தலைவர்களையும் அரசருக்கு ஏவல் புரிந்து வந்த பிரிவுகளின் தலைவர்களையும், ஆயிரவர், நூற்றுவர் தலைவர்களையும், அரசரின் உடைமைகளைக் கண்காணித்து வந்தவர்களையும், தம் புதல்வர்களையும், அண்ணகர்களையும், செல்வாக்கு உள்ளவர்களையும், ஆற்றல் மிக்க வீரர்கள் அனைவரையும் யெருசலேமில் கூடிவரக் கட்டளையிட்டார்.
2. அப்போது அரசர் எழுந்து நின்று கூறினதாவது: "என் சகோதரரே, என் மக்களே, நான் சொல்லுவதைக் கேளுங்கள். நம் கடவுளின் கால்மணையாகிய உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்கு ஓர் ஆலயத்தைக் கட்ட நினைத்திருந்தேன். அதைக் கட்டுவதற்கு எல்லாவற்றையும் தயாரித்தும் விட்டேன்.
3. ஆண்டவரோ, 'நீ நமது திருப்பெயருக்கு ஆலயத்தைக் கட்டமாட்டாய். ஏனெனில் நீ அடிக்கடி போர் புரிந்து இரத்தத்தைச் சிந்தியுள்ளாய்' என்று அடியேனுக்குச் சொன்னார்.
4. ஆயினும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் என் குடும்பத்திலிருந்து என்னை என்றென்றும் இஸ்ராயேலின் அரசனாயிருக்கும்படி தேர்ந்து கொண்டார். தலைமை வகிக்குமாறு யூதா குலத்தைத் தேர்ந்து கொண்டார். அந்த யூதா குலத்தினின்றும் என் தந்தையின் குடும்பத்தையே தேர்ந்து கொண்டார். என் தந்தையின் புதல்வரிலும் அடியேனை இஸ்ராயேலர் அனைவருக்கும் அரசனாக்கத் திருவுளம் கொண்டார்.
5. ஆண்டவர் எனக்குப் பல மக்களைத் தந்துள்ளார். அவர்களில் அவர் என் மகன் சாலமோனை இஸ்ராயேலுக்கு அரசனாக ஆண்டவரின் அரியணையில் அமரும்படி தேர்ந்து கொண்டார்.
6. அவர் என்னை நோக்கி, 'உன் மகன் சாலமோனே நமது ஆலயத்தையும் நம் முற்றங்களையும் கட்டுவான். அவனை நமக்கு மகனாகத் தேர்ந்து கொண்டோம். நாம் அவனுக்குத் தந்தையாய் இருப்போம்.
7. மேலும், அவன் நம் கட்டளைகளையும் நீதி முறைமைகளையும் இன்று போல் என்றும் கடைப்பிடித்து வந்தால், அவனது அரசை என்றென்றும் நிலைநிறுத்துவோம்' என்றார்.
8. எனவே, ஆண்டவரின் சபையாகிய இஸ்ராயேலர் அனைவருக்கும் முன்பாகவும், நம் கடவுளின் செவி கேட்கவும் நான் உங்களுக்குச் சொல்லும் அறிவுரையாவது: நீங்கள் உங்கள் ஆண்டவராகிய கடவுளின் எல்லாக் கட்டளைகளையும் கைக்கொண்டு ஒழுகுவீர்களாக. அவ்வாறு செய்வீர்களாயின் இந் நன்னாடு உங்களுக்குச் சொந்தமாகவே இருக்கும்; உங்களுக்குப் பின்னரும் அது உங்கள் மக்கள் கையிலேயே என்றென்றும் இருக்கும்.
9. நீயோ, என் மகன் சாலமோனே, உன் தந்தையின் கடவுளை அறிந்து, முழு இதயத்தோடும் ஆர்வத்தோடும் அவருக்கு ஊழியம் செய். ஏனெனில் ஆண்டவர் எல்லா இதயங்களையும் ஆராய்கிறார்; மனத்தின் எல்லா நினைவுகளையும் அறிகிறார். அவரை நீ தேடினால் கண்டடைவாய்; அவரை நீ புறக்கணித்தாலோ, அவர் என்றென்றும் உன்னைத் தள்ளி விடுவார்.
10. இப்போதோ திருவிடமாகிய ஆலயத்தைக் கட்டும்படி ஆண்டவர் உன்னையே தேர்ந்து கொண்டுள்ளார். எனவே மனவுறுதியோடு அதைச் செய்து முடி" என்றார்.
11. பின்னர், தாவீது தம் மகன் சாலமோனுக்கு ஆலயத்தின் முக மண்டபம், அதன் கருவூல அறைகள், ஆலயக் கட்டடங்கள், மேல் மாடிகள், உள்ளறைகள், இரக்கத்தின் இருக்கை அறை ஆகியவற்றின் மாதிரிகைகளைக் காட்டும் ஓவியம் ஒன்றைக் கொடுத்தார்.
12. மேலும், ஆண்டவரின் ஆலயமுற்றங்கள், சுற்றறைகள், கடவுளின் ஆலயக் கருவூலங்கள், காணிக்கைகளைச் சேர்த்து வைக்கும் அறைகள் முதலியவற்றின் அமைப்பைப் பற்றித் தாம் எண்ணியிருந்தவற்றைச் சாலமோனுக்கு எடுத்துரைத்தார்.
13. ஆண்டவரின் ஆலயத் திருப்பணிக்குத் தேவையான குருக்கள், லேவியரின் பிரிவுகள், ஆண்டவரின் ஆலய வழிபாட்டுக்குத் தேவையான தட்டுமுட்டுகள் ஆகியவை பற்றியும் தமது எண்ணத்தை அவருக்கு விவரமாக எடுத்துக் கூறினார்.
14. திருப்பணிக்குத் தேவையான பொன், வெள்ளிப் பாத்திரங்களைச் செய்வதற்குப் போதுமான பொன்னும் வெள்ளியும் நிறுத்துக் கொடுத்தார்.
15. பொன் விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் விளக்குகளுக்கும் தேவையான பொன்னையும், வெள்ளி விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் விளக்குகளுக்கும் தேவையான வெள்ளியையும் கொடுத்தார்.
16. காணிக்கை அப்பங்களை வைப்பதற்காக உபயோகிக்கப்பட்ட பொன், வெள்ளி மேசைகளுக்கு வேண்டிய பொன், வெள்ளியையும் கொடுத்தார்.
17. மேலும் முட்கரண்டிகளுக்கும் குப்பிகளுக்கும் பசும்பொன்னால் செய்யப்பட வேண்டிய தூபக்கலசங்களுக்கும் அவ்வவற்றின் பொன்னாலான சிறிய சிங்க உருவங்களுக்கும் வேண்டிய பொன்னைக் கொடுத்தார். வெள்ளிச் சிங்கங்களுக்குத் தேவையான வெள்ளியையும் கொடுத்தார்.
18. தூபப்பீடத்திற்காகவும், இறக்கைகளை விரித்து ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை மூடும் கெருபீம்களைக் கொண்ட தேரின் மாதிரியைச் செய்யவும் மிகவும் சுத்தமான தங்கத்தைக் கொடுத்தார்.
19. இந்த மாதிரியின்படி எல்லா வேலைகளையும் நான் அறிந்து கொள்ளும் பொருட்டு அவற்றை ஆண்டவரே தம் கரத்தால் வரைந்து எனக்குத் தெரியப்படுத்தினார் என்றும் கூறினார்.
20. தாவீது தம் மகன் சாலமோனைப் பார்த்து, "திடம்கொள், ஆண்மையுடன் செயலில் இறங்கு! அஞ்சாதே; மனம் தளராதே, ஏனெனில் என் கடவுளாகிய ஆண்டவர் உன்னுடன் இருப்பார். ஆண்டவரின் ஆலயத்தில் வழிபாடு செலுத்துவதற்கு வேண்டிய வேலைகளை எல்லாம் நீ செய்து முடிக்கும் வரை அவர் உன்னை விட்டு விலகவும் மாட்டார்; உன்னைக் கைவிடவும் மாட்டார்,
21. இதோ, கடவுளின் ஆலயத் திருப்பணிக்கென்று குருக்களின் பிரிவுகளும், லேவியரின் அணிகளும் உனக்கு முன் தயாராய் இருக்கின்றன. தலைவர்களும் மக்களும் உனக்குத் துணையாய் இருந்து உன் கட்டளைகளை எல்லாம் செய்யக் காத்திருக்கிறார்கள்" என்றார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 29 Chapters, Current Chapter 28 of Total Chapters 29
1 நாளாகமம் 28:31
1. தாவீது இஸ்ராயேலின் தலைவர்களையும் குலத்தலைவர்களையும் அரசருக்கு ஏவல் புரிந்து வந்த பிரிவுகளின் தலைவர்களையும், ஆயிரவர், நூற்றுவர் தலைவர்களையும், அரசரின் உடைமைகளைக் கண்காணித்து வந்தவர்களையும், தம் புதல்வர்களையும், அண்ணகர்களையும், செல்வாக்கு உள்ளவர்களையும், ஆற்றல் மிக்க வீரர்கள் அனைவரையும் யெருசலேமில் கூடிவரக் கட்டளையிட்டார்.
2. அப்போது அரசர் எழுந்து நின்று கூறினதாவது: "என் சகோதரரே, என் மக்களே, நான் சொல்லுவதைக் கேளுங்கள். நம் கடவுளின் கால்மணையாகிய உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்கு ஓர் ஆலயத்தைக் கட்ட நினைத்திருந்தேன். அதைக் கட்டுவதற்கு எல்லாவற்றையும் தயாரித்தும் விட்டேன்.
3. ஆண்டவரோ, 'நீ நமது திருப்பெயருக்கு ஆலயத்தைக் கட்டமாட்டாய். ஏனெனில் நீ அடிக்கடி போர் புரிந்து இரத்தத்தைச் சிந்தியுள்ளாய்' என்று அடியேனுக்குச் சொன்னார்.
4. ஆயினும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் என் குடும்பத்திலிருந்து என்னை என்றென்றும் இஸ்ராயேலின் அரசனாயிருக்கும்படி தேர்ந்து கொண்டார். தலைமை வகிக்குமாறு யூதா குலத்தைத் தேர்ந்து கொண்டார். அந்த யூதா குலத்தினின்றும் என் தந்தையின் குடும்பத்தையே தேர்ந்து கொண்டார். என் தந்தையின் புதல்வரிலும் அடியேனை இஸ்ராயேலர் அனைவருக்கும் அரசனாக்கத் திருவுளம் கொண்டார்.
5. ஆண்டவர் எனக்குப் பல மக்களைத் தந்துள்ளார். அவர்களில் அவர் என் மகன் சாலமோனை இஸ்ராயேலுக்கு அரசனாக ஆண்டவரின் அரியணையில் அமரும்படி தேர்ந்து கொண்டார்.
6. அவர் என்னை நோக்கி, 'உன் மகன் சாலமோனே நமது ஆலயத்தையும் நம் முற்றங்களையும் கட்டுவான். அவனை நமக்கு மகனாகத் தேர்ந்து கொண்டோம். நாம் அவனுக்குத் தந்தையாய் இருப்போம்.
7. மேலும், அவன் நம் கட்டளைகளையும் நீதி முறைமைகளையும் இன்று போல் என்றும் கடைப்பிடித்து வந்தால், அவனது அரசை என்றென்றும் நிலைநிறுத்துவோம்' என்றார்.
8. எனவே, ஆண்டவரின் சபையாகிய இஸ்ராயேலர் அனைவருக்கும் முன்பாகவும், நம் கடவுளின் செவி கேட்கவும் நான் உங்களுக்குச் சொல்லும் அறிவுரையாவது: நீங்கள் உங்கள் ஆண்டவராகிய கடவுளின் எல்லாக் கட்டளைகளையும் கைக்கொண்டு ஒழுகுவீர்களாக. அவ்வாறு செய்வீர்களாயின் இந் நன்னாடு உங்களுக்குச் சொந்தமாகவே இருக்கும்; உங்களுக்குப் பின்னரும் அது உங்கள் மக்கள் கையிலேயே என்றென்றும் இருக்கும்.
9. நீயோ, என் மகன் சாலமோனே, உன் தந்தையின் கடவுளை அறிந்து, முழு இதயத்தோடும் ஆர்வத்தோடும் அவருக்கு ஊழியம் செய். ஏனெனில் ஆண்டவர் எல்லா இதயங்களையும் ஆராய்கிறார்; மனத்தின் எல்லா நினைவுகளையும் அறிகிறார். அவரை நீ தேடினால் கண்டடைவாய்; அவரை நீ புறக்கணித்தாலோ, அவர் என்றென்றும் உன்னைத் தள்ளி விடுவார்.
10. இப்போதோ திருவிடமாகிய ஆலயத்தைக் கட்டும்படி ஆண்டவர் உன்னையே தேர்ந்து கொண்டுள்ளார். எனவே மனவுறுதியோடு அதைச் செய்து முடி" என்றார்.
11. பின்னர், தாவீது தம் மகன் சாலமோனுக்கு ஆலயத்தின் முக மண்டபம், அதன் கருவூல அறைகள், ஆலயக் கட்டடங்கள், மேல் மாடிகள், உள்ளறைகள், இரக்கத்தின் இருக்கை அறை ஆகியவற்றின் மாதிரிகைகளைக் காட்டும் ஓவியம் ஒன்றைக் கொடுத்தார்.
12. மேலும், ஆண்டவரின் ஆலயமுற்றங்கள், சுற்றறைகள், கடவுளின் ஆலயக் கருவூலங்கள், காணிக்கைகளைச் சேர்த்து வைக்கும் அறைகள் முதலியவற்றின் அமைப்பைப் பற்றித் தாம் எண்ணியிருந்தவற்றைச் சாலமோனுக்கு எடுத்துரைத்தார்.
13. ஆண்டவரின் ஆலயத் திருப்பணிக்குத் தேவையான குருக்கள், லேவியரின் பிரிவுகள், ஆண்டவரின் ஆலய வழிபாட்டுக்குத் தேவையான தட்டுமுட்டுகள் ஆகியவை பற்றியும் தமது எண்ணத்தை அவருக்கு விவரமாக எடுத்துக் கூறினார்.
14. திருப்பணிக்குத் தேவையான பொன், வெள்ளிப் பாத்திரங்களைச் செய்வதற்குப் போதுமான பொன்னும் வெள்ளியும் நிறுத்துக் கொடுத்தார்.
15. பொன் விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் விளக்குகளுக்கும் தேவையான பொன்னையும், வெள்ளி விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் விளக்குகளுக்கும் தேவையான வெள்ளியையும் கொடுத்தார்.
16. காணிக்கை அப்பங்களை வைப்பதற்காக உபயோகிக்கப்பட்ட பொன், வெள்ளி மேசைகளுக்கு வேண்டிய பொன், வெள்ளியையும் கொடுத்தார்.
17. மேலும் முட்கரண்டிகளுக்கும் குப்பிகளுக்கும் பசும்பொன்னால் செய்யப்பட வேண்டிய தூபக்கலசங்களுக்கும் அவ்வவற்றின் பொன்னாலான சிறிய சிங்க உருவங்களுக்கும் வேண்டிய பொன்னைக் கொடுத்தார். வெள்ளிச் சிங்கங்களுக்குத் தேவையான வெள்ளியையும் கொடுத்தார்.
18. தூபப்பீடத்திற்காகவும், இறக்கைகளை விரித்து ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை மூடும் கெருபீம்களைக் கொண்ட தேரின் மாதிரியைச் செய்யவும் மிகவும் சுத்தமான தங்கத்தைக் கொடுத்தார்.
19. இந்த மாதிரியின்படி எல்லா வேலைகளையும் நான் அறிந்து கொள்ளும் பொருட்டு அவற்றை ஆண்டவரே தம் கரத்தால் வரைந்து எனக்குத் தெரியப்படுத்தினார் என்றும் கூறினார்.
20. தாவீது தம் மகன் சாலமோனைப் பார்த்து, "திடம்கொள், ஆண்மையுடன் செயலில் இறங்கு! அஞ்சாதே; மனம் தளராதே, ஏனெனில் என் கடவுளாகிய ஆண்டவர் உன்னுடன் இருப்பார். ஆண்டவரின் ஆலயத்தில் வழிபாடு செலுத்துவதற்கு வேண்டிய வேலைகளை எல்லாம் நீ செய்து முடிக்கும் வரை அவர் உன்னை விட்டு விலகவும் மாட்டார்; உன்னைக் கைவிடவும் மாட்டார்,
21. இதோ, கடவுளின் ஆலயத் திருப்பணிக்கென்று குருக்களின் பிரிவுகளும், லேவியரின் அணிகளும் உனக்கு முன் தயாராய் இருக்கின்றன. தலைவர்களும் மக்களும் உனக்குத் துணையாய் இருந்து உன் கட்டளைகளை எல்லாம் செய்யக் காத்திருக்கிறார்கள்" என்றார்.
Total 29 Chapters, Current Chapter 28 of Total Chapters 29
×

Alert

×

tamil Letters Keypad References