3. யூதாவின் புதல்வர்: ஏர், ஓனான், சேலா ஆகிய மூவரும் சூயேயின் மகளாகிய கானானியப் பெண்ணிடம் அவருக்குப் பிறந்தனர். யூதாவின் மூத்த மகன் ஏர் ஆண்டவர் திருமுன் தீயவழியில் நடந்து வந்தார்; எனவே அவரைக் கொன்று போட்டார்.
|
4. தம் மருமகளாகிய தாமார் மூலம் யூதாவுக்கு பாரேஸ், ஜாரா என்பவர்கள் பிறந்தனர். ஆகவே யூதாவுக்கு மொத்தம் ஐந்து புதல்வர்.
|
7. கார்மியின் மகன் அக்கார் சாபத்துக்குரியவற்றைத் திருடிப் பாவம் புரிந்து இஸ்ராயேலில் குழப்பம் உண்டு பண்ணினார்.
|
16. சார்வியா, அபிகாயில் என்பவர்கள் இவர்களுடைய சகோதரிகள். சார்வியாளுக்கு அபிசாயி, யோவாப், அசாயேல் என்ற மூன்று புதல்வர்கள்.
|
18. எஸ்ரோனின் மகன் காலேபோ அசுபாளை மணந்து எரியோத்தைப் பெற்றார். பிறகு அவருக்கு யாசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள் பிறந்தனர்.
|
21. பிறகு எஸ்ரோன் கலாதின் தந்தை மக்கீரின் மகளை மண முடித்தார். அப்போது அவருக்கு வயது அறுபது. அவள் அவருக்குச் சேகுபைப் பெற்றாள். சேகுப் ஐயீரைப் பெற்றார்.
|
23. கெசூர், ஆராம் என்போர் ஐயீரின் நகர்களையும், கனாத்தையும், அதைச் சேர்ந்த அறுபது நகர்களையும், இவற்றிற்கடுத்த ஊர்களையும் கைப்பற்றினர். அவர்கள் அனைவரும் கலாதின் தந்தை மக்கீரின் புதல்வர்கள்.
|
24. எஸ்ரோன் இறந்த பிறகு காலேப் தம் தந்தையின் மனைவியாகிய எப்பிராத்தாளோடு மண உறவு கொண்டார். இவள் அவருக்குத் தேக்குவாயின் தந்தையாகிய அசூரைப் பெற்றாள்.
|
25. எஸ்ரோனுடைய மூத்த மகன் பெயர் எரமெயேல். இவருடைய தலைமகன் பெயர் இராம். பிறகு புனா, ஆராம், அசாம், அக்கியா ஆகியோர் பிறந்தனர்.
|
27. இவளே ஓனாமின் தாய். எரமெயேலின் தலைமகன் இராமுடைய புதல்வர்களின் பெயர்கள்: மொவோசு, யாமீன், ஆக்கார் என்பவனாம்.
|
28. ஓனாம் என்பவருக்கு செமேயி, யாதா, ஆகியோர் பிறந்தனர். செமேயியின் புதல்வரோ நதாப், அபிசூர் என்பவர்கள்.
|
30. நதாபின் புதல்வர் சலேத், அப்பைம் என்பவர்கள். சலேத்துக்கு மரணம் வரை மகப்பேறு இல்லை. அப்பைமின் மகன் பெயர் ஏசி.
|
32. செமேயியுடைய சகோதரரான யாதாவின் புதல்வர் ஏத்தேர், யோனத்தான் என்று அழைக்கப் பெற்றனர். ஏத்தேரும் மகப்பேறின்றி இறந்தார்.
|
34. சேசானுக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வரில்லை. ஆனால் ஏரா என்ற பெயருள்ள எகிப்திய அடிமை ஒருவன் இருந்தான்.
|
43. எபிரோனின் தந்தை மரேசாவின் புதல்வருமே. எபிரோனின் புதல்வர் பெயர்: கோரே, தப்புவா, ரேக்கேம், சம்மா என்பனவாம்.
|
47. ஆரான் கெசேசைப் பெற்றார். யகத்தாயியின் புதல்வர்கள் பெயர்: ரேகோம், யோவத்தான், கெசான், பாலெத், எப்பா, சாப் என்பன.
|
49. அவளே மத்மேனாவின் தந்தையாகிய சாப்பையும் மக்பேனாவிற்கும் காப்பாவிற்கும் தந்தையான சுவேயையும் பெற்றாள். காலேபின் மகள் பெயர் அக்சா.
|
52. காரியாத்தியாரிமின் தந்தை சோபாலுக்குப் புதல்வர்கள் பிறந்தனர். ஆரோவேயும், மெனுகோத் சந்ததியில் பாதிப்பேருமே அவர்கள்.
|
53. எத்திரேயரும் அபுத்தேயரும் கெமத்தேயரும் மசெரேயரும் காரியாத்தியாரிமின் வழி வந்தோர்களாவர்; இவர்களிடமிருந்து சாரைத்தரும், எஸ்தாவோலித்தரும் தோன்றினர்.
|
54. பெத்லெகேம், நேத்தோபாத்தி, அதரோத்-பேத்-யோவாப் நகர மக்களும், மற்றும் மானக்தியரிலும் சோரியரிலும் பாதிப்பேரும் சல்மாவுடைய குலத்திலே உதித்தவர்கள்.
|
55. யாபேசில் குடியிருந்த மறைவல்லுநரின் குலவழியினர், கூடாரங்களில் தங்கியிருந்தனர். பாடியும் (இசைக் கருவிகள்) மீட்டியும் வந்தனர். இவர்களே ரெக்காபுடைய குலத்தந்தையான காலோர் வழிவந்த கினேயராவர்.
|