1. இவ்வாறு கடவுளின் திருப் பேழையைக் கொணர்ந்து, தாவீது அதற்காக அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே அதை நிறுவினர். பின் கடவுளின் திருமுன் தகனப்பலிகளையும், சமாதானப் பலிகளையும் ஒப்புக் கொடுத்தனர்.
|
2. தகனப் பலிகளையும், சமாதானப் பலிகளையும் தாவீது ஒப்புக்கொடுத்து முடிந்தபின், ஆண்டவரின் திருப் பெயரால் மக்களை ஆசீர்வதித்தார்.
|
3. மேலும் ஆண், பெண் அனைவருக்கும் தனித்தனியே ஓர் அப்பத்தையும், ஒரு மாட்டிறைச்சித் துண்டையும், எண்ணெயில் பொரிக்கப்பட்ட மிருதுவான மாவையும் பங்கிட்டுக் கொடுத்தார்.
|
4. பின் ஆண்டவரின் திருப் பேழைக்கு முன் திருப்பணி புரியவும், அவருடைய செயல்களை நினைவுகூர்ந்து இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளை வாழ்த்திப் போற்றவும் லேவியரில் சிலரை நியமித்தார். அவர்களில் அசாயியைத் தலைவனாயும்;
|
5. அவனுக்கு அடுத்தபடியாக சக்கரியாசையும்; யாகியேல், செமிரமோத், யேகியேல், மத்தாத்தியாசு, எலியாப், பனாயியாசு, ஒபேதெதோம் ஆகியோரையும்; தம்புரு, சுரமண்டலக் கருவிகளை இசைக்க ஏகியேலையும்;
|
6. கைத்தாளம் கொட்ட ஆசாப்பையும்; ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின் முன் இடைவிடாமல் எக்காளம் ஊதக் குருக்களாகிய பனாயியாசையும் யாசியேலையும் நியமித்தார்.
|
7. அன்று ஆண்டவரைப் புகழ்ந்து பாடும் பொருட்டுத் தாவீது தலைவன் ஆசாப்பிடமும், அவனுடைய சகோதரரிடமும் கொடுத்த பாடலாவது:
|
8. ஆண்டவரைப் புகழுங்கள்; அவரது திரப்பெயரைக் கூவி அழையுங்கள். அவர் தம் செயல்களை மக்களுக்குப் பறைசாற்றுங்கள்.
|
9. அவருக்குப் பாடல்பாடி, அவருக்கு வீணை மீட்டுங்கள். அவர்தம் வியத்தகு செயல்களை எல்லாம் எடுத்தியம்புங்கள்.
|
15. அவர் செய்த உடன்படிக்கையையும் ஆயிரம் தலைமுறைகளுக்கென்று அவர் கட்டளையிட்டவற்றையும் என்றும் நினைவில் கொள்ளுங்கள். ஆபிரகாமோடு அவர் செய்து கொண்ட உடன்படிக்கையும்,
|
17. அதை யாக்கோபுக்குக் சட்டமாகவும், இஸ்ராயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
|
21. யாரும் அவர்களுக்குத் தீங்கு இழைக்க நீர் விட்டுவிடவில்லை. அவர்கள் பொருட்டு அரசர்களைக் கடிந்து கொண்டீர்.
|
22. 'நாம் அபிஷுகம் செய்தவர்களைத் தொடாதீர்கள்; நாம் தேர்ந்துகொண்ட இறைவாக்கினர்களுக்குத் தீங்கு இழைக்காதீர்கள்' என்றார்.
|
24. மக்களுக்கு அவரது மகிமையை எடுத்துரைப்பீர். எல்லா இனத்தாரிடமும் அவர்தம் வியத்தகு செயல்களை எடுத்தியம்புவீர்.
|
25. ஏனெனில் ஆண்டவர் பெரியவர்; உயர் புகழ்ச்சிக்கு உரியவர்; தெய்வங்கள் எல்லாவற்றையும் விட ஆண்டவருக்கே அதிகம் அஞ்ச வேண்டும்.
|
27. மகிமையும் புகழும் அவரது திருமுன் இருக்கின்றன. வல்லமையும் மகிழ்ச்சியும் அவரது இடத்தில் இருக்கின்றன.
|
29. ஆண்டவரது திருப் பெயருக்குரிய மகிமையைச் செலுத்துங்கள். காணிக்கைகளோடு அவரது திரு முன் வாருங்கள். தூய திருக்கோலத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்.
|
31. விண்ணகம் மகிழவும், மண்ணகம் அக்களிக்கவும் கடவன. ஆண்டவர் அரசாளுகிறார் என்று மக்களிடையே அவர்கள் உரைக்கட்டும்.
|
33. அப்பொழுது காட்டின் மரங்கள் ஆண்டவர் திருமுன் புகழ் பாடும். ஏனெனில் அவர் உலகை நடுத்தீர்க்க வருவார்.
|
35. எம் மீட்பராகிய கடவுளே! எங்களைக் காப்பாற்றும்; புறவினத்தாரிடமிருந்து எங்களை விடுவித்தருளும்; ஒன்றாகக் கூட்டிச் சேர்த்தருளும்; அப்பொழுது நாங்கள் உம் திருப் பெயருக்கு நன்றி கூறுவோம்; உம் திருப்புகழ் பாடி மகிழ்வோம்' என்று சொல்லுங்கள்.
|
36. இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் என்றென்றும் புகழப்படுவாராக!" அதற்கு மக்கள் எல்லாரும், "ஆமென்" என்றுரைத்து ஆண்டவரைப் புகழ்ந்து பாடினர்.
|
37. பின் தாவீது ஆண்டவரின் திருப்பேழைக்கு முன்பாக ஆசாப்பையும் அவன் குடும்பத்தாரையும் அவர்கள் நாளும் முறைப்படி திருப்பேழைக்கு முன் இடைவிடாமல் திருப்பணி செய்யக் கட்டளையிட்டார்.
|
38. ஒபேதெதோமையும், அவன் குடும்பத்தவர் அறுபத்தெட்டுப் பேரையும், இதித்தூவின் மகன் ஒபேதெதோமையும் ஓசாவையும் வாயிற்காவலராக நியமித்தார்.
|
39. மேலும் காபாவோன் மேட்டில் பள்ளி கொண்ட ஆண்டவரின் உறைவிடத்திற்கு முன் சாதோக்கையும் அவர் சகோதரரையும் குருக்களாக நியமித்தார்.
|
40. இஸ்ராயேலுக்குக் கொடுக்கப்பட்ட ஆண்டவரின் திருச்சட்ட நூலில் எழுதியுள்ளபடி, காலையிலும் மாலையிலும் இடைவிடாமல் தகனப் பலி பீடத்தின் மேல் அவர்கள் தகனப் பலிகளை ஒப்புக் கொடுக்கக் கட்டளையிட்டார்.
|
41. அவர்களோடு ஏமானையும், இதித்தூனையும், பெயர் கூறித் தேர்ந்து கொள்ளப்பட்ட ஏனையோரையும், 'ஆண்டவரின் இரக்கம் என்றென்றும் உள்ளது' என்று சொல்லி அவரைத் துதிக்கப் பணித்தார்.
|
42. அத்துடன் ஏமான், இதித்தூன் ஆகியோரை, எக்காளங்களையும், கைத்தாளங்களையும், கடவுளைத் துதிப்பதற்குரிய எல்லாவித இசைக்கருவிகளையும் இசைக்கப் பணிந்தார். இதித்தூனின் புதல்வரை வாயிற் காவலராக ஏற்படுத்தினார்.
|
43. பின் எல்லா மக்களும் தத்தம் வீடு திரும்பினர். தாவீதும் தம் வீட்டாருக்கு ஆசி வழங்கத் தம் இல்லம் ஏகினார்.
|