தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 நாளாகமம்
1. இவ்வாறு கடவுளின் திருப் பேழையைக் கொணர்ந்து, தாவீது அதற்காக அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே அதை நிறுவினர். பின் கடவுளின் திருமுன் தகனப்பலிகளையும், சமாதானப் பலிகளையும் ஒப்புக் கொடுத்தனர்.
2. தகனப் பலிகளையும், சமாதானப் பலிகளையும் தாவீது ஒப்புக்கொடுத்து முடிந்தபின், ஆண்டவரின் திருப் பெயரால் மக்களை ஆசீர்வதித்தார்.
3. மேலும் ஆண், பெண் அனைவருக்கும் தனித்தனியே ஓர் அப்பத்தையும், ஒரு மாட்டிறைச்சித் துண்டையும், எண்ணெயில் பொரிக்கப்பட்ட மிருதுவான மாவையும் பங்கிட்டுக் கொடுத்தார்.
4. பின் ஆண்டவரின் திருப் பேழைக்கு முன் திருப்பணி புரியவும், அவருடைய செயல்களை நினைவுகூர்ந்து இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளை வாழ்த்திப் போற்றவும் லேவியரில் சிலரை நியமித்தார். அவர்களில் அசாயியைத் தலைவனாயும்;
5. அவனுக்கு அடுத்தபடியாக சக்கரியாசையும்; யாகியேல், செமிரமோத், யேகியேல், மத்தாத்தியாசு, எலியாப், பனாயியாசு, ஒபேதெதோம் ஆகியோரையும்; தம்புரு, சுரமண்டலக் கருவிகளை இசைக்க ஏகியேலையும்;
6. கைத்தாளம் கொட்ட ஆசாப்பையும்; ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின் முன் இடைவிடாமல் எக்காளம் ஊதக் குருக்களாகிய பனாயியாசையும் யாசியேலையும் நியமித்தார்.
7. அன்று ஆண்டவரைப் புகழ்ந்து பாடும் பொருட்டுத் தாவீது தலைவன் ஆசாப்பிடமும், அவனுடைய சகோதரரிடமும் கொடுத்த பாடலாவது:
8. ஆண்டவரைப் புகழுங்கள்; அவரது திரப்பெயரைக் கூவி அழையுங்கள். அவர் தம் செயல்களை மக்களுக்குப் பறைசாற்றுங்கள்.
9. அவருக்குப் பாடல்பாடி, அவருக்கு வீணை மீட்டுங்கள். அவர்தம் வியத்தகு செயல்களை எல்லாம் எடுத்தியம்புங்கள்.
10. அவரது திருப்பெயரைப் போற்றுங்கள். ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் உவகை கொள்வதாக.
11. ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள். அவரை நாளும் நாடுங்கள்.
12. அவர் செய்த அதிசயங்களையும், அருங்குறிகளையும், அவர் தம் நீதித் தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
13. இஸ்ராயேல் குலமே! அவருடைய ஊழியரே! அவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களே!
14. அவரே நம் ஆண்டவராகிய கடவுள். அவருடைய நீதித் தீர்ப்புகள் வையகம் எங்கும் விளங்குகின்றன.
15. அவர் செய்த உடன்படிக்கையையும் ஆயிரம் தலைமுறைகளுக்கென்று அவர் கட்டளையிட்டவற்றையும் என்றும் நினைவில் கொள்ளுங்கள். ஆபிரகாமோடு அவர் செய்து கொண்ட உடன்படிக்கையும்,
16. ஈசாக்குக்கு அவர் இட்ட ஆணையையும் என்றென்றும் நினைவு கூருங்கள்.
17. அதை யாக்கோபுக்குக் சட்டமாகவும், இஸ்ராயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
18. 'கானான் நாட்டை உங்களுக்குத் தருவோம்; அதுவே உங்கள் உரிமைச் சொத்து ஆகும்' என்றார்.
19. அப்பொழுது அவர்கள் அந்நியராய், சிறிய தொகையினராய், மிகச்சில குடிகளாய் இருந்தார்கள்.
20. அவர்கள் ஓர் இன மக்களை விட்டு மறு இனமக்களிடமும், ஒரு நாட்டை விட்டு மறு நாட்டிற்கும் சென்றார்கள்.
21. யாரும் அவர்களுக்குத் தீங்கு இழைக்க நீர் விட்டுவிடவில்லை. அவர்கள் பொருட்டு அரசர்களைக் கடிந்து கொண்டீர்.
22. 'நாம் அபிஷுகம் செய்தவர்களைத் தொடாதீர்கள்; நாம் தேர்ந்துகொண்ட இறைவாக்கினர்களுக்குத் தீங்கு இழைக்காதீர்கள்' என்றார்.
23. அனைத்துலக மக்களே! ஆண்டவருக்குப் பண் இசைப்பீர். நாள்தோறும் அவரது மீட்பைப் பறைசாற்றுவீர்.
24. மக்களுக்கு அவரது மகிமையை எடுத்துரைப்பீர். எல்லா இனத்தாரிடமும் அவர்தம் வியத்தகு செயல்களை எடுத்தியம்புவீர்.
25. ஏனெனில் ஆண்டவர் பெரியவர்; உயர் புகழ்ச்சிக்கு உரியவர்; தெய்வங்கள் எல்லாவற்றையும் விட ஆண்டவருக்கே அதிகம் அஞ்ச வேண்டும்.
26. மக்களின் தெய்வங்களோ வெறும் சிலைகளே. ஆண்டவரோ விண்ணைப் படைத்தவர்.
27. மகிமையும் புகழும் அவரது திருமுன் இருக்கின்றன. வல்லமையும் மகிழ்ச்சியும் அவரது இடத்தில் இருக்கின்றன.
28. மக்கள் குலங்களே, ஆண்டவரைப் புகழுங்கள். மகிமையும் வல்லமையும் அவருக்குச் செலுத்துங்கள்.
29. ஆண்டவரது திருப் பெயருக்குரிய மகிமையைச் செலுத்துங்கள். காணிக்கைகளோடு அவரது திரு முன் வாருங்கள். தூய திருக்கோலத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்.
30. மண்ணகம் முழுவதும் அவருக்கு முன் நடுங்கக்கடவது; ஏனெனில் பூமிக்கு அசையாத அடித்தளமிட்டவர் அவரே.
31. விண்ணகம் மகிழவும், மண்ணகம் அக்களிக்கவும் கடவன. ஆண்டவர் அரசாளுகிறார் என்று மக்களிடையே அவர்கள் உரைக்கட்டும்.
32. கடலும் அதில் வாழ் அனைத்தும் முழங்கட்டும்; வயல்களும் அவற்றில் உள்ள யாவும் களிகூரட்டும்.
33. அப்பொழுது காட்டின் மரங்கள் ஆண்டவர் திருமுன் புகழ் பாடும். ஏனெனில் அவர் உலகை நடுத்தீர்க்க வருவார்.
34. ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்; அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளது.
35. எம் மீட்பராகிய கடவுளே! எங்களைக் காப்பாற்றும்; புறவினத்தாரிடமிருந்து எங்களை விடுவித்தருளும்; ஒன்றாகக் கூட்டிச் சேர்த்தருளும்; அப்பொழுது நாங்கள் உம் திருப் பெயருக்கு நன்றி கூறுவோம்; உம் திருப்புகழ் பாடி மகிழ்வோம்' என்று சொல்லுங்கள்.
36. இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் என்றென்றும் புகழப்படுவாராக!" அதற்கு மக்கள் எல்லாரும், "ஆமென்" என்றுரைத்து ஆண்டவரைப் புகழ்ந்து பாடினர்.
37. பின் தாவீது ஆண்டவரின் திருப்பேழைக்கு முன்பாக ஆசாப்பையும் அவன் குடும்பத்தாரையும் அவர்கள் நாளும் முறைப்படி திருப்பேழைக்கு முன் இடைவிடாமல் திருப்பணி செய்யக் கட்டளையிட்டார்.
38. ஒபேதெதோமையும், அவன் குடும்பத்தவர் அறுபத்தெட்டுப் பேரையும், இதித்தூவின் மகன் ஒபேதெதோமையும் ஓசாவையும் வாயிற்காவலராக நியமித்தார்.
39. மேலும் காபாவோன் மேட்டில் பள்ளி கொண்ட ஆண்டவரின் உறைவிடத்திற்கு முன் சாதோக்கையும் அவர் சகோதரரையும் குருக்களாக நியமித்தார்.
40. இஸ்ராயேலுக்குக் கொடுக்கப்பட்ட ஆண்டவரின் திருச்சட்ட நூலில் எழுதியுள்ளபடி, காலையிலும் மாலையிலும் இடைவிடாமல் தகனப் பலி பீடத்தின் மேல் அவர்கள் தகனப் பலிகளை ஒப்புக் கொடுக்கக் கட்டளையிட்டார்.
41. அவர்களோடு ஏமானையும், இதித்தூனையும், பெயர் கூறித் தேர்ந்து கொள்ளப்பட்ட ஏனையோரையும், 'ஆண்டவரின் இரக்கம் என்றென்றும் உள்ளது' என்று சொல்லி அவரைத் துதிக்கப் பணித்தார்.
42. அத்துடன் ஏமான், இதித்தூன் ஆகியோரை, எக்காளங்களையும், கைத்தாளங்களையும், கடவுளைத் துதிப்பதற்குரிய எல்லாவித இசைக்கருவிகளையும் இசைக்கப் பணிந்தார். இதித்தூனின் புதல்வரை வாயிற் காவலராக ஏற்படுத்தினார்.
43. பின் எல்லா மக்களும் தத்தம் வீடு திரும்பினர். தாவீதும் தம் வீட்டாருக்கு ஆசி வழங்கத் தம் இல்லம் ஏகினார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 29 Chapters, Current Chapter 16 of Total Chapters 29
1 நாளாகமம் 16:1
1. இவ்வாறு கடவுளின் திருப் பேழையைக் கொணர்ந்து, தாவீது அதற்காக அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே அதை நிறுவினர். பின் கடவுளின் திருமுன் தகனப்பலிகளையும், சமாதானப் பலிகளையும் ஒப்புக் கொடுத்தனர்.
2. தகனப் பலிகளையும், சமாதானப் பலிகளையும் தாவீது ஒப்புக்கொடுத்து முடிந்தபின், ஆண்டவரின் திருப் பெயரால் மக்களை ஆசீர்வதித்தார்.
3. மேலும் ஆண், பெண் அனைவருக்கும் தனித்தனியே ஓர் அப்பத்தையும், ஒரு மாட்டிறைச்சித் துண்டையும், எண்ணெயில் பொரிக்கப்பட்ட மிருதுவான மாவையும் பங்கிட்டுக் கொடுத்தார்.
4. பின் ஆண்டவரின் திருப் பேழைக்கு முன் திருப்பணி புரியவும், அவருடைய செயல்களை நினைவுகூர்ந்து இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளை வாழ்த்திப் போற்றவும் லேவியரில் சிலரை நியமித்தார். அவர்களில் அசாயியைத் தலைவனாயும்;
5. அவனுக்கு அடுத்தபடியாக சக்கரியாசையும்; யாகியேல், செமிரமோத், யேகியேல், மத்தாத்தியாசு, எலியாப், பனாயியாசு, ஒபேதெதோம் ஆகியோரையும்; தம்புரு, சுரமண்டலக் கருவிகளை இசைக்க ஏகியேலையும்;
6. கைத்தாளம் கொட்ட ஆசாப்பையும்; ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின் முன் இடைவிடாமல் எக்காளம் ஊதக் குருக்களாகிய பனாயியாசையும் யாசியேலையும் நியமித்தார்.
7. அன்று ஆண்டவரைப் புகழ்ந்து பாடும் பொருட்டுத் தாவீது தலைவன் ஆசாப்பிடமும், அவனுடைய சகோதரரிடமும் கொடுத்த பாடலாவது:
8. ஆண்டவரைப் புகழுங்கள்; அவரது திரப்பெயரைக் கூவி அழையுங்கள். அவர் தம் செயல்களை மக்களுக்குப் பறைசாற்றுங்கள்.
9. அவருக்குப் பாடல்பாடி, அவருக்கு வீணை மீட்டுங்கள். அவர்தம் வியத்தகு செயல்களை எல்லாம் எடுத்தியம்புங்கள்.
10. அவரது திருப்பெயரைப் போற்றுங்கள். ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் உவகை கொள்வதாக.
11. ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள். அவரை நாளும் நாடுங்கள்.
12. அவர் செய்த அதிசயங்களையும், அருங்குறிகளையும், அவர் தம் நீதித் தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
13. இஸ்ராயேல் குலமே! அவருடைய ஊழியரே! அவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களே!
14. அவரே நம் ஆண்டவராகிய கடவுள். அவருடைய நீதித் தீர்ப்புகள் வையகம் எங்கும் விளங்குகின்றன.
15. அவர் செய்த உடன்படிக்கையையும் ஆயிரம் தலைமுறைகளுக்கென்று அவர் கட்டளையிட்டவற்றையும் என்றும் நினைவில் கொள்ளுங்கள். ஆபிரகாமோடு அவர் செய்து கொண்ட உடன்படிக்கையும்,
16. ஈசாக்குக்கு அவர் இட்ட ஆணையையும் என்றென்றும் நினைவு கூருங்கள்.
17. அதை யாக்கோபுக்குக் சட்டமாகவும், இஸ்ராயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
18. 'கானான் நாட்டை உங்களுக்குத் தருவோம்; அதுவே உங்கள் உரிமைச் சொத்து ஆகும்' என்றார்.
19. அப்பொழுது அவர்கள் அந்நியராய், சிறிய தொகையினராய், மிகச்சில குடிகளாய் இருந்தார்கள்.
20. அவர்கள் ஓர் இன மக்களை விட்டு மறு இனமக்களிடமும், ஒரு நாட்டை விட்டு மறு நாட்டிற்கும் சென்றார்கள்.
21. யாரும் அவர்களுக்குத் தீங்கு இழைக்க நீர் விட்டுவிடவில்லை. அவர்கள் பொருட்டு அரசர்களைக் கடிந்து கொண்டீர்.
22. 'நாம் அபிஷுகம் செய்தவர்களைத் தொடாதீர்கள்; நாம் தேர்ந்துகொண்ட இறைவாக்கினர்களுக்குத் தீங்கு இழைக்காதீர்கள்' என்றார்.
23. அனைத்துலக மக்களே! ஆண்டவருக்குப் பண் இசைப்பீர். நாள்தோறும் அவரது மீட்பைப் பறைசாற்றுவீர்.
24. மக்களுக்கு அவரது மகிமையை எடுத்துரைப்பீர். எல்லா இனத்தாரிடமும் அவர்தம் வியத்தகு செயல்களை எடுத்தியம்புவீர்.
25. ஏனெனில் ஆண்டவர் பெரியவர்; உயர் புகழ்ச்சிக்கு உரியவர்; தெய்வங்கள் எல்லாவற்றையும் விட ஆண்டவருக்கே அதிகம் அஞ்ச வேண்டும்.
26. மக்களின் தெய்வங்களோ வெறும் சிலைகளே. ஆண்டவரோ விண்ணைப் படைத்தவர்.
27. மகிமையும் புகழும் அவரது திருமுன் இருக்கின்றன. வல்லமையும் மகிழ்ச்சியும் அவரது இடத்தில் இருக்கின்றன.
28. மக்கள் குலங்களே, ஆண்டவரைப் புகழுங்கள். மகிமையும் வல்லமையும் அவருக்குச் செலுத்துங்கள்.
29. ஆண்டவரது திருப் பெயருக்குரிய மகிமையைச் செலுத்துங்கள். காணிக்கைகளோடு அவரது திரு முன் வாருங்கள். தூய திருக்கோலத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்.
30. மண்ணகம் முழுவதும் அவருக்கு முன் நடுங்கக்கடவது; ஏனெனில் பூமிக்கு அசையாத அடித்தளமிட்டவர் அவரே.
31. விண்ணகம் மகிழவும், மண்ணகம் அக்களிக்கவும் கடவன. ஆண்டவர் அரசாளுகிறார் என்று மக்களிடையே அவர்கள் உரைக்கட்டும்.
32. கடலும் அதில் வாழ் அனைத்தும் முழங்கட்டும்; வயல்களும் அவற்றில் உள்ள யாவும் களிகூரட்டும்.
33. அப்பொழுது காட்டின் மரங்கள் ஆண்டவர் திருமுன் புகழ் பாடும். ஏனெனில் அவர் உலகை நடுத்தீர்க்க வருவார்.
34. ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்; அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளது.
35. எம் மீட்பராகிய கடவுளே! எங்களைக் காப்பாற்றும்; புறவினத்தாரிடமிருந்து எங்களை விடுவித்தருளும்; ஒன்றாகக் கூட்டிச் சேர்த்தருளும்; அப்பொழுது நாங்கள் உம் திருப் பெயருக்கு நன்றி கூறுவோம்; உம் திருப்புகழ் பாடி மகிழ்வோம்' என்று சொல்லுங்கள்.
36. இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் என்றென்றும் புகழப்படுவாராக!" அதற்கு மக்கள் எல்லாரும், "ஆமென்" என்றுரைத்து ஆண்டவரைப் புகழ்ந்து பாடினர்.
37. பின் தாவீது ஆண்டவரின் திருப்பேழைக்கு முன்பாக ஆசாப்பையும் அவன் குடும்பத்தாரையும் அவர்கள் நாளும் முறைப்படி திருப்பேழைக்கு முன் இடைவிடாமல் திருப்பணி செய்யக் கட்டளையிட்டார்.
38. ஒபேதெதோமையும், அவன் குடும்பத்தவர் அறுபத்தெட்டுப் பேரையும், இதித்தூவின் மகன் ஒபேதெதோமையும் ஓசாவையும் வாயிற்காவலராக நியமித்தார்.
39. மேலும் காபாவோன் மேட்டில் பள்ளி கொண்ட ஆண்டவரின் உறைவிடத்திற்கு முன் சாதோக்கையும் அவர் சகோதரரையும் குருக்களாக நியமித்தார்.
40. இஸ்ராயேலுக்குக் கொடுக்கப்பட்ட ஆண்டவரின் திருச்சட்ட நூலில் எழுதியுள்ளபடி, காலையிலும் மாலையிலும் இடைவிடாமல் தகனப் பலி பீடத்தின் மேல் அவர்கள் தகனப் பலிகளை ஒப்புக் கொடுக்கக் கட்டளையிட்டார்.
41. அவர்களோடு ஏமானையும், இதித்தூனையும், பெயர் கூறித் தேர்ந்து கொள்ளப்பட்ட ஏனையோரையும், 'ஆண்டவரின் இரக்கம் என்றென்றும் உள்ளது' என்று சொல்லி அவரைத் துதிக்கப் பணித்தார்.
42. அத்துடன் ஏமான், இதித்தூன் ஆகியோரை, எக்காளங்களையும், கைத்தாளங்களையும், கடவுளைத் துதிப்பதற்குரிய எல்லாவித இசைக்கருவிகளையும் இசைக்கப் பணிந்தார். இதித்தூனின் புதல்வரை வாயிற் காவலராக ஏற்படுத்தினார்.
43. பின் எல்லா மக்களும் தத்தம் வீடு திரும்பினர். தாவீதும் தம் வீட்டாருக்கு ஆசி வழங்கத் தம் இல்லம் ஏகினார்.
Total 29 Chapters, Current Chapter 16 of Total Chapters 29
×

Alert

×

tamil Letters Keypad References