1. யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது. |
2. யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி,
தமது நீதியை தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கச்செய்தார். |
3. அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்;
பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய வெற்றியைக் கண்டது. |
4. பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும்
யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள். |
5. சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள்,
சுரமண்டலத்தாலும் பாடலின் சத்தத்தாலும் அவரைப் புகழ்ந்துபாடுங்கள். |
9. அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;
உலகத்தை நீதியோடும் மக்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார். PE |