2. மலைகள் தோன்றுமுன்பும்,
நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர். |
5. அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்;
தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். |
8. எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும்,
எங்களுடைய மறைவான பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். |
9. எங்களுடைய நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது;
ஒரு கதையைப்போல் எங்கள் வருடங்களைக் கழித்துப்போட்டோம். |
10. எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள்,
பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம். |
11. உமது கோபத்தின் வல்லமையையும்,
உமக்குப் பயப்படக்கூடிய விதமாக உமது கடுங்கோபத்தையும் அறிந்துகொள்கிறவன் யார்? |
12. நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி,
எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். |
14. நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி,
காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும். |
15. தேவனே நீர் எங்களை சிறுமைப்படுத்திய நாட்களுக்கும்,
நாங்கள் துன்பத்தைக் கண்ட வருடங்களுக்கும் இணையாக எங்களை மகிழ்ச்சியாக்கும். |
17. எங்களுடைய தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக;
எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும். PE |