1. யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்;
உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன். |
4. என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி,
தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா) |
5. யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும்,
பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும். |
7. தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர்,
தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர். |
8. சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
உம்மைப்போல வல்லமையுள்ள யெகோவா யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது. |
10. நீர் ராகாபை * ராகாப் ஒரு கற்பனையான கடல் பிராணி. யோபு 9:13, 26:12, ஏசாயா 51:9 BR 87:4. ல் குறிப்பிடப்பட்ட ராகாப் புராணக் கதைகளிகளின் கடல் பாம்பு ஆகும் வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்;
உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர். |
11. வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது,
பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர். |
12. வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்;
தாபோரும் † தாபோர் ஒரு மலை. கலேலியா ஏரியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் உயரம் 555 அடிகளாகும் எர்மோனும் ‡ எர்மோன் ஒரு மலையின் பெயர். கலேலியா ஏரியின் வடகிழக்கில் 75 கி. மீ. தூரத்தில் இருக்கிறது. இதின் உயரம் 8,940 அடிகளாகும் உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும். |
14. நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்;
கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும். |
15. கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்;
யெகோவாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள். |
19. அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி:
உதவிசெய்யக்கூடிய சக்தியை ஒரு வல்லமையுள்ளவன்மேல் வைத்து, மக்களில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன். |
20. என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்;
என்னுடைய பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் செய்தேன். |
26. அவன் என்னை நோக்கி:
நீர் என்னுடைய பிதா, என் தேவன், என்னுடைய இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான். |
28. என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்;
என்னுடைய உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும். |
29. அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும்,
அவன் ராஜாசனம் வானங்களுள்ளவரை நிலைநிற்கவும் செய்வேன். |
36. அவனுடைய சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்;
அவனுடைய சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும். |
37. சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும்,
வானத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று சொன்னீர். (சேலா) |
39. உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு,
அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர். |
42. அவனுடைய எதிரிகளின் வலது கையை நீர் உயர்த்தி,
அவனுடைய விரோதிகள் அனைவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர். |
47. என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்;
மனிதர்கள் அனைவரையும் வீணாக படைக்கவேண்டியதென்ன? |
48. மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்?
தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) |
49. ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு
சத்தியம்செய்த உமது ஆரம்பநாட்களின் கிருபைகள் எங்கே? |
50. ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும்,
நீர் அபிஷேகம் செய்தவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால், |
51. யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும்,
வலுமையான மக்கள் எல்லோராலும் நான் என்னுடைய மடியில் சுமக்கும் என்னுடைய நிந்தையையும் நினைத்தருளும். |