1. இஸ்ரவேலின் மேய்ப்பரே,
யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் தங்குகிறவரே, பிரகாசியும். |
2. எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி,
எங்களைக் காப்பாற்ற வந்தருளும். |
3. தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும்,
உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். |
4. சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
உமது மக்களின் விண்ணப்பத்திற்கு விரோதமாக நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர். |
5. கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும்,
மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர். |
7. சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும்,
உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். |
8. நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக்கொடியைக் கொண்டுவந்து,
தேசங்களைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர். |
14. சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து,
இந்தத் திராட்சைச்செடியை விசாரித்தருளும்; |
16. அது நெருப்பால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் போனது;
உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள். |
17. உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும்,
உமக்கு நீர் திடப்படுத்தின மனிதகுமாரன் மீதிலும் இருப்பதாக. |
18. அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்;
எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது பெயரைத் தொழுதுகொள்ளுவோம். |
19. சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். PE |