1. என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்;
என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள். |
3. அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்;
எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். |
4. பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல்,
யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். |
5. அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி,
இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி, அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். |
6. இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு,
அவர்கள் எழும்பித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்; |
7. தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து,
தேவனுடைய செயல்களை மறக்காமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்; |
8. இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும்,
தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார். |
10. அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும்,
அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும், |
12. அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே,
அவர் அதிசயமானவைகளைச் செய்தார். |
15. பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து,
மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார். |
17. என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து,
பாலைவனத்திலே உன்னதமான தேவனுக்குக் கோபம் மூட்டினார்கள். |
20. இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது;
அவர் அப்பத்தையும் கொடுக்கமுடியுமோ? தம்முடைய மக்களுக்கு இறைச்சியையும் ஆயத்தப்படுத்துவாரோ என்றார்கள். |
21. ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்;
அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால், |
31. தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி,
அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார். |
36. ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி,
தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள். |
37. அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை;
அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை. |
38. அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்;
அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார். |
45. அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும்,
அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். |
46. அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும்,
அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார். |
47. கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும்,
ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து, |
49. தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும்,
பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். |
50. அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல்,
அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார். |
51. எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும்,
காமின் * காமின் எகிப்து தேசத்தை குறிக்கிறது. காம் நோவாவின் குமாரன், எகிப்தின் மூதாதையர் என்று ஆதியாகமம் 10:6 ல் சொல்லியிருக்கிறது கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து; |
52. தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து,
அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்; |
53. அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்;
அவர்கள் எதிரிகளைக் கடல் மூடிப்போட்டது. |
54. அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும்,
தமது வலதுகரம் சம்பாதித்த இந்த மலைவரைக்கும் அழைத்துக்கொண்டுவந்து, |
55. அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு,
தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார். |
56. ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து,
அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய், |
58. தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி,
தங்களுடைய விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள். |
60. தாம் மனிதர்களுக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள † சீலொவோம் எருசலேமின் வடக்கே 32 கிமீ தூரத்தில் இருக்கிறது. இஸ்ரவேலின் ஆரம்ப நாட்களில் தேவனுடைய உடன்பட்டிக்கைபெட்டி சீலோவோமில் வைக்கப்பட்டிருந்தது. வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
|
61. தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
|
65. அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும்,
திராட்சைரசத்தால் கெம்பீரிக்கிற பலசாலியைப்போலவும் விழித்து, |
69. தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும்,
என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார். |
71. கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை,
தம்முடைய மக்களாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார். |
72. இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து,
தன்னுடைய கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான். PE |