1. சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு [QBR] தேவன் நல்லவராகவே இருக்கிறார். [QBR]
2. ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும், [QBR] என்னுடைய அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பியது. [QBR]
3. துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது, [QBR] வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன். [QBR]
4. மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை; [QBR] அவர்களுடைய பெலன் உறுதியாக இருக்கிறது. [QBR]
5. மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்; [QBR] மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள். [QBR]
6. ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும், [QBR] கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். [QBR]
7. அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது; [QBR] அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாக நடக்கிறது. [QBR]
8. அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்; [QBR] பெருமையாகப் பேசுகிறார்கள். [QBR]
9. தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்; [QBR] அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது. [QBR]
10. ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; [QBR] தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாகச் சுரந்துவரும். [QBR]
11. தேவனுக்கு அது எப்படித் தெரியும்? [QBR] உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? [QBR] என்று சொல்லுகிறார்கள். [QBR]
12. இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்; [QBR] இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து, [QBR] சொத்தைப் பெருகச்செய்கிறார்கள். [QBR]
13. நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து, [QBR] குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன். [QBR]
14. நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், [QBR] காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன். [QBR]
15. இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால், [QBR] இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன். [QBR]
16. இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; [QBR] நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து, [QBR]
17. அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை, [QBR] அது என்னுடைய பார்வைக்கு கடினமாக இருந்தது. [QBR]
18. நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, [QBR] பாழான இடங்களில் விழச்செய்கிறீர். [QBR]
19. அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்! [QBR] பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள். [QBR]
20. தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, [QBR] நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை கலைத்துவிடுவீர். [QBR]
21. இப்படியாக என்னுடைய மனம் கசந்தது, [QBR] என்னுடைய உள்மனதிலே குத்தப்பட்டேன். [QBR]
22. நான் காரியம் அறியாத மூடனானேன்; [QBR] உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன். [QBR]
23. ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; [QBR] என்னுடைய வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். [QBR]
24. உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, [QBR] முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். [QBR]
25. பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? [QBR] பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. [QBR]
26. என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது; [QBR] தேவன் என்றென்றைக்கும் என்னுடைய இருதயத்தின் கன்மலையும் [QBR] என்னுடைய பங்குமாக இருக்கிறார். [QBR]
27. இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; [QBR] உம்மைவிட்டு உண்மையில்லாமல் போகிற அனைவரையும் அழிப்பீர். [QBR]
28. எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; [QBR] நான் உமது செயல்களையெல்லாம் சொல்லிவரும்படி [QBR] கர்த்தராகிய ஆண்டவர்மேல் என்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறேன். [PE]