1. தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்;
எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும். |
2. துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும்,
அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும். |
4. மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்;
சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள். |
5. அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு,
மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள். |
6. அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி,
தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது. |
8. அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி
அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள். |
10. நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்;
செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள். PE |