தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; [QBR] வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, [QBR] என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது. [QBR]
2. இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து, [QBR] உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். [QBR]
3. உயிரைவிட உமது கிருபை நல்லது; [QBR] என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும். [QBR]
4. என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து, [QBR] உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன். [QBR]
5. நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்; [QBR] என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். [QBR]
6. என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, [QBR] இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன். [QBR]
7. நீர் எனக்குத் துணையாக இருந்ததினால், [QBR] உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன். [QBR]
8. என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; [QBR] உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. [QBR]
9. என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ, [QBR] பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள். [QBR]
10. அவர்கள் வாளால் விழுவார்கள்; [QBR] நரிகளுக்கு இரையாவார்கள். [QBR]
11. ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்; [QBR] தேவன் பேரில் சத்தியம்செய்கிறவர்கள் [QBR] அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்; [QBR] பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 63 of Total Chapters 150
சங்கீதம் 63:121
1. தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்;
வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது,
என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது.
2. இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து,
உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
3. உயிரைவிட உமது கிருபை நல்லது;
என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும்.
4. என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து,
உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன்.
5. நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்;
என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
6. என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது,
இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
7. நீர் எனக்குத் துணையாக இருந்ததினால்,
உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன்.
8. என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது;
உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
9. என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ,
பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.
10. அவர்கள் வாளால் விழுவார்கள்;
நரிகளுக்கு இரையாவார்கள்.
11. ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்;
தேவன் பேரில் சத்தியம்செய்கிறவர்கள்
அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்;
பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும். PE
Total 150 Chapters, Current Chapter 63 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References