1. தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர்,
எங்கள்மேல் கோபமாக இருந்தீர்; மறுபடியும் எங்களிடமாகத் திரும்பியருளும். |
3. உம்முடைய மக்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்;
தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர். |
6. தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு சொன்னார்,
ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன். |
7. கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது,
எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், யூதா என்னுடைய செங்கோல். |
8. மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்,
ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள். |
9. பாதுகாப்பான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்?
ஏதோம்வரை எனக்கு வழி காட்டுகிறவர் யார்? |
10. எங்கள் படைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீர் அல்லவோ?
எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீர் அல்லவோ? |