1. மவுனமாக இருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாக நீதியைப் பேசுவீர்களோ?
மனுமக்களே, நியாயமாகத் தீர்ப்பு செய்வீர்களோ? |
3. துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்;
தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள். |
5. பாம்பாட்டிகள் விநோதமாக ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்தைக் கேட்காதபடிக்குத் தன்னுடைய காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள்.
|
6. தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்;
யெகோவாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும். |
7. கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்;
அவன் தன்னுடைய அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாகப் போகட்டும். |
8. கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக;
பெண்ணின் முதிர்ச்சி அடையாத கருவைப்போல் சூரியனைக் காணாமல் இருப்பார்களாக. |
9. முள் நெருப்பினால் உங்களுடைய பானைகளில் சூடேறுவதற்கு முன்பே
பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டு போவார். |
10. பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்;
அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான். |
11. அப்பொழுது, மெய்யாக நீதிமானுக்குப் பலன் உண்டென்றும்,
மெய்யாக பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனிதன் சொல்லுவான். PE |