1. தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;
கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். |
2. யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;
பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள். |
3. யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது;
மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். |
6. அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும்,
சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார். |
9. யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து,
காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும் யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள். |
11. யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்;
யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். PE |