2. என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து,
எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்? |
3. என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து,
எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். |
4. அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி,
நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும். |
5. நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்;
உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும். |