தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, [QBR] உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும். [QBR]
2. அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே [QBR] என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்? [QBR]
3. நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; [QBR] தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார். [QBR]
4. அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், [QBR] மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது. [QBR]
5. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; [QBR] அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. [QBR]
6. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது; [QBR] அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. [QBR]
7. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; [QBR] அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; [QBR] தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. [QBR]
8. அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், [QBR] அவைகளைப்போலவே இருக்கிறார்கள். [QBR]
9. இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு; [QBR] அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். [QBR]
10. ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்; [QBR] அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். [QBR]
11. யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, [QBR] யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். [QBR]
12. யெகோவா நம்மை நினைத்திருக்கிறார், [QBR] அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், [QBR] அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார். [QBR]
13. யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், [QBR] சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார். [QBR]
14. யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார். [QBR]
15. வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QBR]
16. வானங்கள் யெகோவாவுடையவைகள்; [QBR] பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார். [QBR]
17. இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் [QBR] யெகோவாவை துதிக்கமாட்டார்கள். [QBR]
18. நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் [QBR] யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம். [QBR] அல்லேலூயா. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 115 of Total Chapters 150
சங்கீதம் 115:5
1. எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,
உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும்.
2. அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே
என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்?
3. நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்;
தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார்.
4. அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும்,
மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
5. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது;
அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
6. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது;
அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
7. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது;
அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது;
தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
8. அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும்,
அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
9. இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு;
அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
10. ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்;
அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
11. யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே,
யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
12. யெகோவா நம்மை நினைத்திருக்கிறார்,
அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்,
அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்.
13. யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும்,
சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார்.
14. யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார்.
15. வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
16. வானங்கள் யெகோவாவுடையவைகள்;
பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார்.
17. இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும்
யெகோவாவை துதிக்கமாட்டார்கள்.
18. நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும்
யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம்.
அல்லேலூயா. PE
Total 150 Chapters, Current Chapter 115 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References