3. கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள
பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்வார்களாக. |
6. தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்,
அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்தார். |
9. அவருடைய கிருபையினிமித்தமும்,
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. |
11. காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து,
ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள். |
12. அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்;
உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள். |
13. தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;
அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றினார். |
16. அவருடைய கிருபையினிமித்தமும்,
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. |
17. புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும்
தங்களுடைய அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள். |
19. தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்;
அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார். |
21. அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும்,
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, |
26. அவர்கள் வானத்தில் ஏறி,
ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது. |
28. அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்,
அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். |
30. அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்;
தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார். |
31. அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும்,
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, |
37. வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள்,
அவைகள் வரத்துள்ள பலனைத் தரும். |
38. அவர்களை ஆசீர்வதிக்கிறார்,
மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார். |
40. அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து,
வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து, |
41. எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து,
உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார். |
43. எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்;
ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள். PE |