1. {மேலும் சாலொமோனின் நீதிமொழிகள்} PS யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள்
பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்: |
5. ராஜாவின் முன்னின்று துன்மார்க்கர்களை நீக்கிவிடு,
அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும். |
7. உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல;
அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை. |
8. வழக்காடப் வேகமாகமாகப் போகாதே;
முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. |
9. நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு,
மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே. |
12. கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன்,
பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம். |
13. அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ,
அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான். |
14. கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன்
மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம். |
18. பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன்
தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன். |
20. மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன்,
குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், வெடியுப்பின் * காயத்தின் மேல் உப்பு. காரத்தை/ வலியை அதிகமாக்கும் மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான். |
21. உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால்,
அவனுக்கு சாப்பிட உணவு கொடு; அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. |
22. அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்; † நீ அவனுடைய தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்
யெகோவா உனக்குப் பலனளிப்பார். |
25. தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி
தாகம் மிகுந்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமம். |
26. துன்மார்க்கர்களுக்கு முன்பாக
நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும். |