1. {உணவைக்குறித்த எச்சரிக்கை} [PS] நீ ஒரு அதிபதியோடு சாப்பிடுவதற்கு உட்கார்ந்தால், [QBR] உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாகக் கவனித்துப்பார். [QBR]
2. நீ சாப்பாட்டு பிரியனாக இருந்தால், உன்னுடைய தொண்டையிலே கத்தியை வை. [QBR]
3. அவனுடைய ருசியுள்ள உணவுகள்மீது ஆசைப்படாதே; [QBR] அவைகள் வஞ்சக உணவாக இருக்கலாம். [QBR]
4. செல்வந்தனாகவேண்டுமென்று முயற்சிக்காதே; [QBR] சுயபுத்தியைச் சாராதே. [QBR]
5. இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்? [QBR] அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டு, [QBR] வானில் பறந்துபோகும். [QBR]
6. பொறாமைக்காரனுடைய உணவை சாப்பிடாதே; [QBR] அவனுடைய ருசியுள்ள உணவுகளில் ஆசைப்படாதே. [QBR]
7. அவனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, [QBR] அப்படியே அவனும் இருக்கிறான்; [QBR] சாப்பிடும், குடியும் என்று அவன் உன்னோடு சொன்னாலும், [QBR] அவனுடைய இருதயம் உன்னோடு இருக்காது. [QBR]
8. நீ சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்து, [QBR] உன்னுடைய இனிய சொற்களை இழந்துபோவாய். [QBR]
9. மூடனுடைய காதுகள் கேட்கப் பேசாதே; [QBR] அவன் உன்னுடைய வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை செய்வான். [QBR]
10. பழைய எல்லைக்கல்லை மாற்றாதே; [QBR] திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. [QBR]
11. அவர்களுடைய மீட்பர் வல்லவர்; [QBR] அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார். [QBR]
12. உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், [QBR] உன் காதுகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக. [QBR]
13. பிள்ளையை தண்டிக்காமல் விடாதே; [QBR] அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான். [QBR]
14. நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் [QBR] பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. [QBR]
15. என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால், [QBR] என்னிலே என்னுடைய இருதயம் மகிழும். [QBR]
16. உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், [QBR] என்னுடைய உள்மனம் மகிழும். [QBR]
17. உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; [QBR] நீ நாள்தோறும் யெகோவாவைப் பற்றும் பயத்தோடு இரு. [QBR]
18. நிச்சயமாகவே முடிவு உண்டு; [QBR] உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.
19. என் மகனே, நீ கேட்டு ஞானமடைந்து, [QBR] உன்னுடைய இருதயத்தை நல்வழியிலே நடத்து. [QBR]
20. மதுபானப்பிரியர்களோடும், [QBR] இறைச்சி அதிகமாக சாப்பிடுகிறவர்களோடும் சேராதே. [QBR]
21. குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்; [QBR] தூக்கம் கிழிந்த துணிகளை அணிவிக்கும். [QBR]
22. உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; [QBR] உன்னுடைய தாய் வயதானவளாகும்போது அவளை புறக்கணிக்காதே. [QBR]
23. சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; [QBR] அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு. [QBR]
24. நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; [QBR] ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். [QBR]
25. உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; [QBR] உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.
26. என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு; [QBR] உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக. [QBR]
27. ஒழுங்கீனமானவள் ஆழமான படுகுழி; [QBR] அந்நியனுடைய மனைவி இடுக்கமான கிணறு. [QBR]
28. அவள் கொள்ளைக்காரனைப்போல் ஒளிந்திருந்து, [QBR] மனிதர்களுக்குள்ளே பாவிகளைப் பெருகச்செய்கிறாள். [QBR]
29. ஐயோ, யாருக்கு வேதனை? [QBR] யாருக்குத் துக்கம்? [QBR] யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? [QBR] யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தம்கலங்கின கண்கள்? [QBR]
30. மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி வாழ்பவர்களுக்கும், [QBR] கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானே. [QBR]
31. மதுபானம் இரத்த நிறமாக இருந்து, [QBR] பாத்திரத்தில் பளபளப்பாகத் தோன்றும்போது, [QBR] நீ அதைப் பார்க்காதே; அது மெதுவாக இறங்கும். [QBR]
32. முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், [QBR] விரியனைப்போல் தீண்டும். [QBR]
33. உன் கண்கள் ஒழுங்கீனமான பெண்களை நோக்கும்; [QBR] உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். [QBR]
34. நீ நடுக்கடலிலே தூங்குகிறவனைப்போலவும், [QBR] பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலவும் இருப்பாய். [QBR]
35. என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; [QBR] என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; [QBR] நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய். [PE]