1. {சமுதாய வாழ்வின் விதிகள்} [PS] திரளான செல்வத்தைவிட நற்புகழே தெரிந்துகொள்ளப்படக்கூடியது; [QBR] பொன் வெள்ளியைவிட தயையே நலம். [QBR]
2. செல்வந்தனும், தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; [QBR] அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் யெகோவா. [QBR]
3. விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; [QBR] பேதைகள் நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். [QBR]
4. தாழ்மைக்கும் யெகோவாவுக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் செல்வமும், [QBR] மகிமையும் ஜீவனும் ஆகும். [QBR]
5. மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முட்களும் கண்ணிகளும் உண்டு; [QBR] தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவன் [QBR] அவைகளைவிட்டுத் தூரமாக விலகிப்போவான். [QBR]
6. பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; [QBR] அவனுடைய முதிர்வயதிலும் அதை விடாமல் இருப்பான். [QBR]
7. செல்வந்தன் தரித்திரனை ஆளுகிறான்; [QBR] கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. [QBR]
8. அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; [QBR] அவனுடைய கடுங்கோபத்தின் கோல் ஒழியும். [QBR]
9. கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; [QBR] அவன் தன்னுடைய உணவில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான். [QBR]
10. பரியாசக்காரனைத் துரத்திவிடு; [QBR] அப்பொழுது சண்டை நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும். [QBR]
11. சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; [QBR] ராஜா அவனுக்கு நண்பனாவான். [QBR]
12. யெகோவாவுடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; [QBR] துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார். [QBR]
13. வெளியிலே சிங்கம், [QBR] வீதியிலே கொல்லப்படுவேன் என்று சோம்பேறி சொல்லுவான். [QBR]
14. ஒழுங்கீனமான பெண்களின் வாய் ஆழமான படுகுழி; [QBR] யெகோவாவுடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான். [QBR]
15. பிள்ளையின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும்; [QBR] அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும். [QBR]
16. தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன், [QBR] தனக்குக் குறைச்சல் உண்டாகவே செல்வந்தனுக்குக் கொடுப்பான்.
17. {ஞானிகளுடைய சொல்} [PS] உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, [QBR] என் போதகத்தை உன் இருதயத்தில் வை. [QBR]
18. அவைகளை உன் உள்ளத்தில் காத்து, [QBR] அவைகளை உன்னுடைய உதடுகளில் நிலைத்திருக்கச்செய்யும்போது, [QBR] அது இன்பமாக இருக்கும். [QBR]
19. உன் நம்பிக்கை யெகோவாமேல் இருக்கும்படி, [QBR] இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். [QBR]
20. சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், [QBR] நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை பதிலாக சொல்லும்படிக்கும், [QBR]
21. ஆலோசனையையும், [QBR] ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா? [QBR]
22. ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; [QBR] சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே. [QBR]
23. யெகோவா அவர்களுக்காக வழக்காடி, [QBR] அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய உயிரைக் கொள்ளையிடுவார். [QBR]
24. கோபக்காரனுக்குத் தோழனாகாதே; [QBR] கோபமுள்ள மனிதனோடு நடக்காதே. [QBR]
25. அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, [QBR] உன்னுடைய ஆத்துமாவுக்குக் கண்ணியை கொண்டுவருவாய். [QBR]
26. உறுதியளித்து உடன்பட்டு, [QBR] கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. [QBR]
27. செலுத்த உனக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தால், [QBR] நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே. [QBR]
28. உன்னுடைய முன்னோர்கள் நாட்டின ஆரம்ப எல்லைக்குறியை மாற்றாதே. [QBR]
29. தன்னுடைய வேலையில் ஜாக்கிரதையாக இருக்கிறவனை நீ கண்டால், [QBR] அவன் சாதாரணமானவர்களுக்கு முன்பாக நிற்காமல், [QBR] ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். [PE]