தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
1. {ஞானம் நன்மைகளின் ஊற்று} [PS] மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, [QBR] உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன். [QBR]
2. ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; [QBR] கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான். [QBR]
3. மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; [QBR] என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும். [QBR]
4. செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; [QBR] தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான். [QBR]
5. பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; [QBR] பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. [QBR]
6. பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; [QBR] கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன். [QBR]
7. தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, [QBR] எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; [QBR] அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், [QBR] அவைகளோ வெறும் வார்த்தைகளே. [QBR]
8. ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; [QBR] புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான். [QBR]
9. பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; [QBR] பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். [QBR]
10. மூடனுக்குச் செல்வம் தகாது; [QBR] பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது. [QBR]
11. மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; [QBR] குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. [QBR]
12. ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; [QBR] அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும். [QBR]
13. மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; [QBR] மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர். [QBR]
14. வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; [QBR] புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு. [QBR]
15. சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; [QBR] அசதியானவன் பட்டினியாக இருப்பான். [QBR]
16. கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; [QBR] தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான். [QBR]
17. ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; [QBR] அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். [QBR]
18. நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; [QBR] ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே. [QBR]
19. கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; [QBR] நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும். [QBR]
20. உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, [QBR] ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். [QBR]
21. மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; [QBR] ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும். [QBR]
22. நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; [QBR] பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன். [QBR]
23. யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; [QBR] அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; [QBR] தீமை அவனை அணுகாது. [QBR]
24. சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, [QBR] அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான். [QBR]
25. பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; [QBR] புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான். [QBR]
26. தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், [QBR] வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன். [QBR]
27. என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் [QBR] போதகங்களை நீ கேட்காதே. [QBR]
28. அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; [QBR] துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும். [QBR]
29. பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், [QBR] மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 19 of Total Chapters 31
நீதிமொழிகள் 19:16
1. {ஞானம் நன்மைகளின் ஊற்று} PS மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட,
உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன்.
2. ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல;
கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
3. மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்;
என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.
4. செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்;
தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான்.
5. பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்;
பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
6. பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்;
கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன்.
7. தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே,
எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்;
அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான்,
அவைகளோ வெறும் வார்த்தைகளே.
8. ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்;
புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
9. பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்;
பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
10. மூடனுக்குச் செல்வம் தகாது;
பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது.
11. மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்;
குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
12. ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்;
அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.
13. மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்;
மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர்.
14. வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து;
புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு.
15. சோம்பல் தூங்கிவிழச்செய்யும்;
அசதியானவன் பட்டினியாக இருப்பான்.
16. கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்;
தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
17. ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்;
அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
18. நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி;
ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே.
19. கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்;
நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும்.
20. உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி,
ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
21. மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்;
ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.
22. நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு;
பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன்.
23. யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது;
அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்;
தீமை அவனை அணுகாது.
24. சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து,
அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.
25. பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்;
புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
26. தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன்,
வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.
27. என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும்
போதகங்களை நீ கேட்காதே.
28. அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்;
துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.
29. பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும்,
மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது. PE
Total 31 Chapters, Current Chapter 19 of Total Chapters 31
×

Alert

×

tamil Letters Keypad References