1. {ஞானம் வாழ்வின் வழிகாட்டி} [PS] பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், [QBR] எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான். [QBR]
2. மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், [QBR] தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். [QBR]
3. துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும். [QBR]
4. மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; [QBR] ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும். [QBR]
5. வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, [QBR] துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல. [QBR]
6. மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், [QBR] அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும். [QBR]
7. மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, [QBR] அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி. [QBR]
8. கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், [QBR] ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். [QBR]
9. தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன். [QBR]
10. யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; [QBR] நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான். [QBR]
11. செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; [QBR] அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும். [QBR]
12. அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; [QBR] மேன்மைக்கு முன்னானது தாழ்மை. [QBR]
13. காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, [QBR] அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும். [QBR]
14. மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; [QBR] முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்? [QBR]
15. புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; [QBR] ஞானியின் செவி அறிவை நாடும். [QBR]
16. ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, [QBR] பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும். [QBR]
17. தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; [QBR] அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான். [QBR]
18. சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, [QBR] பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும். [QBR]
19. பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட [QBR] கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; [QBR] அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும். [QBR]
20. அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; [QBR] அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான். [QBR]
21. மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; [QBR] அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள். [QBR]
22. மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; [QBR] யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான். [QBR]
23. தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; [QBR] செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான். [QBR]
24. நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்; [QBR] சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு. [PE]