தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
1. {விவேகத்தினால் வரும் நன்மை} [PS] சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, [QBR] சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம். [QBR]
2. புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, [QBR] சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான். [QBR]
3. வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; [QBR] இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா. [QBR]
4. தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; [QBR] பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான். [QBR]
5. ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; [QBR] ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். [QBR]
6. பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; [QBR] பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே. [QBR]
7. மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; [QBR] பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது. [QBR]
8. லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; [QBR] அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும். [QBR]
9. குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்; [QBR] கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான். [QBR]
10. மூடனை நூறடி அடிப்பதைவிட, [QBR] புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும். [QBR]
11. தீயவன் கலகத்தையே தேடுகிறான்; [QBR] கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான். [QBR]
12. தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட, [QBR] குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல். [QBR]
13. நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, [QBR] அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது. [QBR]
14. சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்; [QBR] ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு. [QBR]
15. துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், [QBR] நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். [QBR]
16. ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? [QBR] அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. [QBR]
17. நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; [QBR] இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். [QBR]
18. புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான். [QBR]
19. விவாதப்பிரியன் பாவப்பிரியன்; [QBR] தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான். [QBR]
20. மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; [QBR] பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான். [QBR]
21. மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; [QBR] மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. [QBR]
22. மனமகிழ்ச்சி நல்ல மருந்து; [QBR] முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும். [QBR]
23. துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான். [QBR]
24. ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; [QBR] மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும். [QBR]
25. மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், [QBR] தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். [QBR]
26. நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல. [QBR]
27. அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; [QBR] விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். [QBR]
28. பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; [QBR] தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 17 of Total Chapters 31
நீதிமொழிகள் 17:19
1. {விவேகத்தினால் வரும் நன்மை} PS சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட,
சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம்.
2. புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு,
சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான்.
3. வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்;
இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.
4. தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்;
பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
5. ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்;
ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
6. பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்;
பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே.
7. மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது;
பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது.
8. லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்;
அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
9. குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்;
கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
10. மூடனை நூறடி அடிப்பதைவிட,
புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும்.
11. தீயவன் கலகத்தையே தேடுகிறான்;
கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
12. தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட,
குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல்.
13. நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ,
அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.
14. சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்;
ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு.
15. துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும்,
நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.
16. ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு?
அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
17. நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்;
இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
18. புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான்.
19. விவாதப்பிரியன் பாவப்பிரியன்;
தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
20. மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை;
பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
21. மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்;
மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
22. மனமகிழ்ச்சி நல்ல மருந்து;
முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும்.
23. துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான்.
24. ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்;
மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும்.
25. மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும்,
தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
26. நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
27. அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்;
விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
28. பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்;
தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான். PE
Total 31 Chapters, Current Chapter 17 of Total Chapters 31
×

Alert

×

tamil Letters Keypad References