1. {தேவ ஞானமும் நீதியும்} [PS] மனதின் யோசனைகள் மனிதனுடையது; [QBR] நாவின் பதில் யெகோவாவால் வரும். [QBR]
2. மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; [QBR] யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். [QBR]
3. உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி; [QBR] அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும். [QBR]
4. யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; [QBR] தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார். [QBR]
5. மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; [QBR] கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். [QBR]
6. கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; [QBR] யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள். [QBR]
7. ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், [QBR] அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார். [QBR]
8. அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, [QBR] நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது. [QBR]
9. மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; [QBR] அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா. [QBR]
10. ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; [QBR] நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது. [QBR]
11. நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; [QBR] பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல். [QBR]
12. அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; [QBR] நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும். [QBR]
13. நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; [QBR] நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். [QBR]
14. ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; [QBR] ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான். [QBR]
15. ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; [QBR] அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும். [QBR]
16. பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! [QBR] வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை [QBR]
17. தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; [QBR] தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான். [QBR]
18. அழிவுக்கு முன்னானது அகந்தை; [QBR] விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. [QBR]
19. அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, [QBR] சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம். [QBR]
20. விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; [QBR] யெகோவாவை நம்புகிறவன் பாக்கியவான். [QBR]
21. இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; [QBR] உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும். [QBR]
22. புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே. [QBR]
23. ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; [QBR] அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும். [QBR]
24. இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், [QBR] எலும்புகளுக்கு மருந்தாகும். [QBR]
25. மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; [QBR] அதின் முடிவோ மரண வழிகள். [QBR]
26. உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; [QBR] அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும். [QBR]
27. வீணான மகன் கிண்டிவிடுகிறான்; [QBR] அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது. [QBR]
28. மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; [QBR] கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான். [QBR]
29. கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, [QBR] அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான். [QBR]
30. அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, [QBR] தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான். [QBR]
31. நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது [QBR] மகிமையான கிரீடம். [QBR]
32. பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; [QBR] பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன். [QBR]
33. சீட்டு மடியிலே போடப்படும்; [QBR] காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும். [PE]