தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
1. {சாலொமோனின் நீதிமொழிகள்} [PS] சாலொமோனின் நீதிமொழிகள்: [QBR] ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; [QBR] மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான். [QBR]
2. அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; [QBR] நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். [QBR]
3. யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; [QBR] துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். [QBR]
4. சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; [QBR] சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். [QBR]
5. கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; [QBR] அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன். [QBR]
6. நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; [QBR] கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். [QBR]
7. நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; [QBR] துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும். [QBR]
8. இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; [QBR] அலப்புகிற மூடனோ விழுவான். [QBR]
9. உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; [QBR] கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். [QBR]
10. கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; [QBR] அலப்புகிற மூடன் விழுவான். [QBR]
11. நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; [QBR] கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். [QBR]
12. பகை விரோதங்களை எழுப்பும்; [QBR] அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும். [QBR]
13. புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; [QBR] மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. [QBR]
14. ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; [QBR] மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. [QBR]
15. செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; [QBR] ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும். [QBR]
16. நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும், [QBR] துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும். [QBR]
17. புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; [QBR] திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். [QBR]
18. பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; [QBR] புறங்கூறுகிறவன் மதிகேடன். [QBR]
19. சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; [QBR] தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். [QBR]
20. நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; [QBR] துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது. [QBR]
21. நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; [QBR] மூடரோ மதியீனத்தினால் சாவார்கள். [QBR]
22. யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; [QBR] அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார். [QBR]
23. தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; [QBR] புத்திமானுக்கோ ஞானம் உண்டு. [QBR]
24. துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; [QBR] நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். [QBR]
25. சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; [QBR] நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்; [QBR]
26. பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, [QBR] அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். [QBR]
27. யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; [QBR] துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும். [QBR]
28. நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; [QBR] துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும். [QBR]
29. யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, [QBR] அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம். [QBR]
30. நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; [QBR] துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை. [QBR]
31. நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; [QBR] மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும். [QBR]
32. நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; [QBR] துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 10 of Total Chapters 31
நீதிமொழிகள் 10:8
1. {சாலொமோனின் நீதிமொழிகள்} PS சாலொமோனின் நீதிமொழிகள்:
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்;
மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.
2. அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது;
நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.
3. யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்;
துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.
4. சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;
சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
5. கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்;
அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.
6. நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்;
கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
7. நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்;
துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும்.
8. இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்;
அலப்புகிற மூடனோ விழுவான்.
9. உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்;
கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
10. கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்;
அலப்புகிற மூடன் விழுவான்.
11. நீதிமானுடைய வாய் ஜீவஊற்று;
கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
12. பகை விரோதங்களை எழுப்பும்;
அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும்.
13. புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்;
மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.
14. ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்;
மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.
15. செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்;
ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும்.
16. நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும்,
துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.
17. புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்;
திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.
18. பகையை மறைக்கிறவன் பொய் உதடன்;
புறங்கூறுகிறவன் மதிகேடன்.
19. சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது;
தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
20. நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி;
துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
21. நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்;
மூடரோ மதியீனத்தினால் சாவார்கள்.
22. யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்;
அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார்.
23. தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு;
புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
24. துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்;
நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
25. சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்;
நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்;
26. பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ,
அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
27. யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்;
துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.
28. நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்;
துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.
29. யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு,
அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.
30. நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை;
துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.
31. நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்;
மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.
32. நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்;
துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது. PE
Total 31 Chapters, Current Chapter 10 of Total Chapters 31
×

Alert

×

tamil Letters Keypad References