3. என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்;
நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாக பேசும். |
8. நான் என் காதாலே கேட்க நீர் சொன்னதும்,
நான் கேள்விப்பட்ட உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்: |
10. இதோ, என்னில் அவர் குற்றம் கண்டுபிடிக்கப்பார்க்கிறார்,
என்னைத் தமக்கு எதிரியாக நினைத்துக்கொள்ளுகிறார். |
12. இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்;
மனிதனைவிட தேவன் பெரியவராயிருக்கிறார். |
13. அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக்
பதில் * தேவன் மனிதர்களின் காரியத்தில் பதில் தருவதில்லை சொல்லவில்லையென்று நீர் அவருடன் ஏன் வழக்காடுகிறீர்? |
16. அவர் இரவு நேரத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனிதருடைய காதுகளுக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி,
அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே பயமுறுத்தி, |
19. அவன் தன் படுக்கையிலே வாதையினாலும்,
தன் எல்லா எலும்புகளிலும் கடுமையான வியாதியினாலும் தண்டிக்கப்படுகிறான். |
23. ஆயிரத்தில் ஒருவராகிய பரிந்துபேசுகிற தேவ தூதனானவர் மனிதனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிப்பதற்கு,
அவனுக்கு சாதகமாக இருந்தாரென்றால், |
24. அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காமல் இருக்க:
நீர் அவனைக் காப்பாற்றும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார். |
25. அப்பொழுது அவனுடைய உடல் வாலிபத்தில் இருந்ததைவிட ஆரோக்கியமடையும்;
தன் இளவயது நாட்களுக்குத் திரும்புவான். |
26. அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது,
அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்துடன் பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனிதனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார். |
27. அவன் மனிதரை நோக்கிப் பார்த்து:
நான் பாவம் செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பலன் கொடுக்கவில்லை. |
28. என் ஆத்துமா படுகுழியில் இறங்காமல் இருக்க,
அவர் அதை காப்பாற்றுவார் ஆகையால் என் உயிர் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான். |
29. இதோ, தேவன் மனிதனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும்,
அவனை உயிருள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பதற்கும், |
32. சொல்லவேண்டிய நியாயங்கள் இருந்ததென்றால்,
எனக்குப் பதில் கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க எனக்கு ஆசையுண்டு. |
33. ஒன்றும் இல்லாதிருந்ததென்றால் நீர் என் சொல்லைக் கேளும்,
மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான். PE |