3. நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்;
ஆனாலும் உணர்வினால் என் ஆவி மறுமொழி சொல்ல என்னை ஏவுகிறது. |
4. துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும்,
மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிடம்மாத்திரம் நிற்கும் என்பதையும், |
8. அவன் ஒரு கனவைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்;
இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான். |
10. அவனுடைய பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்;
அவன் பறித்ததை அவன் * அவனுடைய பலத்த கை கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும். |
11. அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து,
அவனுடன் மண்ணிலே படுத்துக்கொள்ளும். |
18. தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்;
அவன் திரும்பக் கொடுக்கிறது அவன் செல்வத்திற்குச் சரியாயிருக்கும்; அவன் மகிழ்ச்சியில்லாதிருப்பான். |
20. தன் வயிறு திருப்தி அடையாமல் இருந்ததினாலும்,
அவன் விரும்பின காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை. |
22. அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின்,
அவனுக்கு வேதனை உண்டாகும்; சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும். |
23. தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும்,
அவர் அவன்மேல் தமது கோபத்தின் கடுமையை வரவழைத்து, அவன் சாப்பிடும்போது, அதை அவன்மேல் வரச்செய்வார். |
25. உருவின பட்டயம் அவன் சரீரத்தையும்,
மின்னுகிற அம்பு அவன் ஈரலையும் உருவிப்போகும்; பயங்கரங்கள் அவன்மேல் வரும். |
26. அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்;
அணையாத நெருப்பு அவனை எரிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் பாடு அநுபவிப்பான். |
28. வெள்ளத்தினால் அவனுடைய வீட்டின் சம்பத்துப் கரைந்து போய்விடும்;
தேவனுடைய கோபம் வெள்ளம் போல் அவைகள் மேல் ஊற்றப்படும் கரைந்து போகும். |
29. இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும்,
அவனுடைய செய்கைக்கு தேவனால் அவனுக்கு வரும் பங்காகும்” என்றான். PE |