தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோபு
1. என் ஆவி உடைகிறது [* என் ஆவி நொறுங்கி விட்டது.] , என் ஆயுசு நாட்கள் முடிகிறது; [QBR] கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது. [QBR]
2. கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? [QBR] அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது. [QBR]
3. தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு, [QBR] எனக்காகப் பிணைக்கப்படுவீராக; [QBR] வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்? [QBR]
4. நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்; [QBR] ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர். [QBR]
5. எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, [QBR] அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும். [QBR]
6. மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; [QBR] அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன். [QBR]
7. இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது; [QBR] என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது. [QBR]
8. சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்; [QBR] குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான். [QBR]
9. நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; [QBR] சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான். [QBR]
10. இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்; [QBR] உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை. [QBR]
11. என் நாட்கள் முடிந்தது; [QBR] என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது. [QBR]
12. அவைகள் இரவைப் பகலாக்கியது; [QBR] இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது. [QBR]
13. அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், [QBR] பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; [QBR] இருளில் என் படுக்கையைப் போடுவேன். [QBR]
14. அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; [QBR] புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன். [QBR]
15. என் நம்பிக்கை இப்போது எங்கே? [QBR] நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்? [QBR]
16. அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; [QBR] அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 42 Chapters, Current Chapter 17 of Total Chapters 42
யோபு 17:15
1. என் ஆவி உடைகிறது * என் ஆவி நொறுங்கி விட்டது. , என் ஆயுசு நாட்கள் முடிகிறது;
கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
2. கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ?
அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
3. தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு,
எனக்காகப் பிணைக்கப்படுவீராக;
வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
4. நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்;
ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.
5. எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ,
அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
6. மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்;
அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன்.
7. இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது;
என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
8. சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்;
குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
9. நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்;
சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
10. இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்;
உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை.
11. என் நாட்கள் முடிந்தது;
என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது.
12. அவைகள் இரவைப் பகலாக்கியது;
இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது.
13. அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும்,
பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்;
இருளில் என் படுக்கையைப் போடுவேன்.
14. அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்;
புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
15. என் நம்பிக்கை இப்போது எங்கே?
நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?
16. அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்;
அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். PE
Total 42 Chapters, Current Chapter 17 of Total Chapters 42
×

Alert

×

tamil Letters Keypad References