2. “இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்;
நீங்கள் எல்லோரும் வேதனையுண்டாக்குகிற தேற்றரவாளர். |
4. உங்களைப்போல நானும் பேசமுடியும்;
நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும். |
5. ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன்,
என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும். |
8. நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி;
என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்திற்கு முன்பாக பதில் சொல்லும். |
9. என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது,
என் மேல் கோபப்படுகிறான்; என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான். |
10. எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்;
இழிவாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; என்னைச் சுற்றிலும் கூட்டங்கூடினார்கள். |
12. நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்;
அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார். |
13. அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;
என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்; என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார். |
15. நான் சணல்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்;
என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன். |
19. இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது.
எனக்குச் சாட்சி சொல்லுகிறவர் உன்னதங்களில் இருக்கிறார். |
21. ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல,
தேவனுடன் மனிதனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருந்தால் நலமாயிருக்கும். |