5. உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது;
நீர் தந்திரமுள்ளவர்களின் சொல்லைத் தெரிந்துகொண்டீர். |
6. நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று முடிவு செய்கிறது;
உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது. |
9. நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்?
எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ? |
11. தேவன் அருளிய ஆறுதல்களும்,
உம்முடன் சொல்லப்படுகிற மென்மையான பேச்சும் உமக்கு இழிவான காரியமாயிருக்கிறதோ? |
14. மனிதனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும்,
பெண்ணிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? |
15. இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை;
வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. |
16. அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
|
20. துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்;
பலவந்தம் செய்கிறவனுக்கு அவனுடைய வருடங்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டிருக்கிறது. |
21. பயங்கரமான சத்தம் அவனுடைய காதுகளில் தொனிக்கிறது;
அவன் சமாதானமாயிருக்கும்போது பாழாக்குகிறவன் அவன்மேல் வருவான். |
22. இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல்,
ஒளிந்திருக்கிறவர்களின் பட்டயத்திற்கு அவன் பயப்படுகிறான். |
23. அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்;
இருளானநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான். |
29. அவன் செல்வந்தனாவதுமில்லை,
அவனுடைய செல்வம் நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை. |
30. இருளுக்கு அவன் தப்புவதில்லை;
நெருப்புத்தணல் அவனுடைய கிளையைக் காய்ந்துபோகச் செய்யும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்; |
32. அது அவனுடைய நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாகப் பலிக்கும்;
அவனுடைய செடிகள் பச்சையாக இருப்பதில்லை. |
33. பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சைச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்து போகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான்.
|
35. அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான்;
அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும்” என்றான். PE |