1. கர்த்தாவே, நீர் ஜனங்களைத் தண்டிக்கும் தேவன். நீர் வருகிறவரும் ஜனங்களுக்குத் தண்டனையைத் தருகிறவருமான தேவன்.
|
5. கர்த்தாவே, அவர்கள் உமது ஜனங்களைத் தாக்குகிறார்கள். உமது ஜனங்கள் துன்புறும்படி அவர்கள் செய்கிறார்கள்.
|
6. அத்தீயோர் விதவைகளையும் இத்தேசத்தைப் பார்க்க வருவோரையும் கொல்கிறார்கள். பெற்றோரில்லாத பிள்ளைகளை அவர்கள் கொலை செய்கிறார்கள்.
|
7. அவர்கள் அத்தீயக் காரியங்களைச் செய்வதைக் கர்த்தர் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். நிகழ்வதை இஸ்ரவேலின் தேவன் அறியார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
|
8. தீய ஜனங்களாகிய நீங்கள் மூடர்கள். நீங்கள் எப்போது உங்கள் பாடத்தைக் கற்பீர்கள்? கொடிய ஜனங்களாகிய நீங்கள் அறிவில்லாதவர்கள்! நீங்கள் புரிந்துகொள்ள முயலவேண்டும்.
|
9. தேவன் நமது காதுகளை உண்டாகினார். நிச்சயமாக அவருக்கும் காதுகள் உள்ளன. அவரால் நிகழ்வதைக் கேட்கமுடியும்! தேவன் நமது கண்களை உண்டாக்கினார். நிச்சயமாக அவருக்கும் கண்கள் உள்ளன. அவரால் நிகழ்வதைக் காணமுடியும்!
|
10. தேவன் அந்த ஜனங்களை ஒழுங்குபடுத்துவார். தேவன் அவர்கள் செய்ய வேண்டியவற்றை அவர்களுக்குக் கற்பிப்பார்.
|
11. ஜனங்கள் நினைப்பதை தேவன் அறிகிறார். வெளிப்படும் சிறிய அளவு காற்றைப்போன்றவர்கள் ஜனங்கள் என்பதை தேவன் அறிகிறார்.
|
12. கர்த்தர் ஒழுங்குபடுத்தும் மனிதன் மகிழ்ச்சியாயிருப்பான். சரியான வழியில் வாழ்வதற்கு தேவன் அவனுக்குக் கற்பிப்பார்.
|
13. தேவனே, குழப்பம் நேருகையில் அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர். தீயோர் கல்லறைக்குள் வைக்கப்படும்வரை அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
|
16. தீயோரை எதிர்ப்பதற்கு ஒருவனும் உதவவில்லை. தீமை செய்வோரை எதிர்க்கும்போது ஒருவனும் எனக்குத் துணைவரவில்லை.
|
19. நான் கவலையடைந்து கலங்கியிருந்தேன். ஆனால் கத்தாவே, நீர் எனக்கு ஆறுதல் கூறி எனக்கு மகிழ்ச்சியளித்தீர்.
|
20. தேவனே, நீர் அநீதியுள்ள நீதிபதிகளுக்கு உதவுவதில்லை. ஜனங்களின் வாழ்க்கை கடினமாவதற்கு அத்தீய நீதிபதிகள் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
|
21. அந்நீதிபதிகள் நல்லோரைத் தாக்குகிறார்கள். களங்கமற்ற ஜனங்களைக் குற்றவாளிகள் எனக் கூறி, அவர்களைக் கொல்கிறார்கள்.
|
22. ஆனால் உயரமான பர்வதங்களில் கர்த்தர் எனக்குப் பாதுகாப்பிடம். என் கன்மலையான தேவன் என் பாதுகாப்பிடம்.
|
23. அத்தீய நீதிபதிகள் செய்த தீய காரியங்களுக்காக தேவன் அவர்களைத் தண்டிப்பார். அவர்கள் பாவம் செய்ததால் தேவன் அவர்களை அழிப்பார். எங்கள் தேவனாகிய கர்த்தர் அத்தீய நீதி பதிகளை அழிப்பார்.
|