1. கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன். என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
|
2. கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன். உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது.
|
4. தாவீதே, உன் குடும்பம் என்றென்றும்நிலைத்திருக்கும்படிச் செய்வேன். என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்" என்றார்.
|
5. கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர். வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும். ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும். பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும்.
|
6. பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை. "தெய்வங்களில்" எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது.
|
7. தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார். அவருடைய தூதர்கள் அவரைச் சுற்றியிருப்பார்கள். அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிப்பார்கள். அவரைக் கண்டு பயபக்தியோடு நிற்பார்கள்.
|
8. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை. உம்மைநாங்கள் முழுமையாக நம்பமுடியும்.
|
10. தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர். உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர்.
|
11. தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை. உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர்.
|
12. வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர். தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும்.
|
14. உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது. அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள்.
|
15. தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
|
19. உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், "கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன். அந்த இளைஞனை முக்கியமானவனாக்கினேன். அந்த இளம்வீரனை ஆற்றலுடையவனாக்கினேன்.
|
22. தேர்ந்தெடுத்த அந்த அரசனைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று. தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.
|
24. நான் தேர்ந்தெடுத்த அரசனை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன். அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன்.
|
28. நான் தேர்ந்தெடுத்த அரசனை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும். அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
|
30. அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும், அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
|
33. ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன். நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன்.
|
37. சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும். வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று. அந்த உடன்படிக்கையை நம்பலாம்" என்றீர்.
|
41. கடந்து செல்லும் ஜனங்கள் அவனிடமிருந்த பொருட்களைத் திருடினார்கள். அவனது அயலார் அவனைக் கண்டு நகைத்தனர்.
|
42. நீர் அரசனின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர். அவனது பகைவர்கள் போரில் அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர்.
|
43. தேவனே, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவினிர். உமது அரசன் யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை.
|
46. கர்த்தாவே, இது எத்தனை காலம் தொடரும்? எதுவரைக்கும் நீர் எங்களை உதா சீனப்படுத்துவீர்? என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமா?
|
47. என் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும். குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படி நீர் எங்களைப் படைத்தீர்.
|
49. தேவனே, கடந்த காலத்தில் நீர் காட்டிய அன்பு எங்கே? நீர் தாவீதின் குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பதாக அவனுக்கு வாக்குப்பண்ணினீர்.
|