2. கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது. ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன். என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
|
3. என் அரசரே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு. உமது பலிபீடத்தருகே அப் பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
|
4. உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
|
5. தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
|
6. அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள். தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார். இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
|
7. தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில் ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.
|
9. தேவனே, எங்கள் பாதுகாவலரைப் (கேடகத்தைப்) பாதுகாத்துக்கொள்ளும். நீர் தேர்ந்தெடுத்த அரசன் மீது இரக்கமாயிரும்.
|
10. வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது. எனது தேவனுடைய வீட்டின் வாசலில் நிற்பதோ தீயவனின் வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் நல்லது.
|
11. கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர். தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார். அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
|