1. தேவனே, சில ஜனங்கள் மற்ற நாடுகளிலிருந்து உமது ஜனங்களோடு போரிட வந்தார்கள். அந்த ஜனங்கள் உமது பரிசுத்த ஆலயத்தை அழித்தார்கள். அவர்கள் எருசலேமைப் பாழக்கிச் சென்றார்கள்.
|
2. காட்டுப் பறவைகள் உண்ணும்படி பகைவர்கள் உமது ஊழியக்காரனின் சரீரங்களைக் கொடுத்தார்கள். உம்மைப் பின்பற்றுவோரின் சரீரங்களைக் காட்டு விலங்குகள் உண்ணும்படி விட்டுச்சென்றார்கள்.
|
3. தேவனே, இரத்தம் தண்ணீராகப் பெருக் கெடுத்தோடும் வரைக்கும் பகைவன் உமது ஜனங்களைக் கொன்றான். மரித்த உடல்களைப் புதைப்பதற்கென ஒருவனும் விட்டு வைக்கப்படவில்லை.
|
4. எங்களைச் சுற்றிலுமுள்ள நாடுகள் எங்களை இழிவுப்படுத்தின. எங்களைச் சூழ வாழ்ந்த ஜனங்கள் எங்களை மனம் நோகச்செய்தனர்.
|
5. தேவனே, என்றென்றும் எங்களோடு கோபம்கொள்வீரா? உமது ஆழ்ந்த உணர்ச்சிகள் தொடர்ந்து நெருப்பைப் போல் எரியுமா?
|
6. தேவனே, உம்மை அறியாத தேசங்களின் மீது உமது கோபத்தைத் திருப்பும். உமது நாமத்தை தொழுதுகொள்ளாத தேசங்களின்மீது உமது கோபத்தைத் திருப்பும்.
|
8. தேவனே, எங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காக எங்களைத் தண்டியாதேயும். விரையும், எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டும்! நீர் எங்களுக்கு மிகவும் தேவையானவர்!
|
9. எங்கள் மீட்பராகிய தேவனே, எங்களுக்கு உதவும்! எங்களுக்கு உதவும்! எங்களைக் காப்பாற்றும்!உமது நாமத்துக்கு அது மகிமையை தரும். உமது நாமத்தின் நன்மைக்காக எங்கள் பாவங்களை அழித்துவிடும்.
|
10. பிறதேசங்கள் எங்களிடம், "உங்கள் தேவன் எங்கே? அவர் உங்களுக்கு உதவக் கூடாதா?" என்று கேட்கவிடாதேயும். தேவனே, நாங்கள் பார்க்கும்படி அவர்களைத் தண்டியும். உமது பணியாட்களைக் கொன்றதற்காக அவர்களைத் தண்டியும்.
|
11. சிறைப்பட்டவர்களின் துன்பக் குரலை நீர் கேளும்! தேவனே, உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி மரணத்திற்கென்று தேர்ந்து கொண்ட அந்த ஜனங்களைக் காப்பாற்றும்.
|
12. தேவனே, எங்களைச் சுற்றிலும் வாழும் ஜனங்கள் எங்களுக்குச் செய்ததைப் பார்க்கிலும் ஏழு மடங்கு அவர்களைத் தண்டியும். உம்மை அவமானப்படுத்தியதற்காய் அவர்களைத் தண்டியும்.
|
13. நாங்கள் உமது ஜனங்கள். நாங்கள் உமது மந்தையின் ஆடுகள். நாங்கள் உம்மை என்றென்றும் துதிப்போம். தேவனே, என்றென்றும் எப்போதும் நாங்கள் உம்மைத் துதிப்போம்.
|