1. தேவனே, எழுந்து உமது பகைவர்களைச் சிதறடிக்கச் செய்யும். அவனது பகைவர்கள் எல்லோரும் அவனை விட்டு ஓடிப் போகட்டும்.
|
2. காற்றால் சிதறடிக்கப்படும் புகையைப் போன்று உமது பகைவர்கள் சிதறுண்டு போகட்டும். நெருப்பில் உருகும் மெழுகைப்போன்று உமது பகைவர்கள் அழிந்துபோகட்டும்.
|
3. ஆனால் நல்லோர் மகிழ்ச்சியாயிருப்பார்கள். நல்லோர் தேவனோடுகூட மகிழ்ச்சியாய் காலம் கழிப்பார்கள். நல்லோர் களிப்படைந்து மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள்.
|
4. தேவனை நோக்கிப் பாடுங்கள். அவர் நாமத்தை துதித்துப் பாடுங்கள். தேவனுக்கு வழியை உண்டுபண்ணுங்கள். அவர் பாலைவனத்தில் அவரது இரதத்தைச் செலுத்துகிறார். அவர் நாமம் யேகோவா அவரது நாமத்தைத் துதியுங்கள்.
|
5. அவரது பரிசுத்த ஆலயத்தில், தேவன் அநாதைகளுக்குத் தந்தையைப் போன்றவர். தேவன் விதவைகளைக் கவனித்துக்கொள்கிறார்.
|
6. தேவன் தனிமையில் வாழும் ஜனங்களுக்கு வீட்டைக் கொடுக்கிறார். தேவன் அவரது ஜனங்களைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். ஆனால் தேவனுக்கு எதிராகத் திரும்பும் ஜனங்களோ கொடிய சிறையிலே உழல்வார்கள்.
|
7. தேவனே, உமது ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினீர். நீர் பாலைவனத்தின் குறுக்காகக் கடந்து சென்றீர்.
|
10. உமது மிருகங்கள் அத்தேசத்திற்குத் திரும்பின. தேவனே, அங்கு ஏழைகளுக்குப் பல நல்ல பொருள்கள் கிடைக்கும்படி செய்தீர்.
|
12. "வல்லமையுள்ள அரசர்களின் படைகள் ஓடிப்போயின! வீரர் போருக்குப்பின் தந்த பொருள்களை வீட்டில் பெண்கள் பங்கிட்டனர். வீட்டில் தங்கியிருந்தோர் செல்வத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
|
13. அவர்கள் வெள்ளியால் மூடப்பட்ட (விலை உயர்ந்த நகைகள்.) புறாக்களின் சிறகுகளை பெறுவார்கள். அச்சிறகுகள் பொன்னால் பளபளத்து ஒளிரும்."
|
16. பாசான் மலையே, ஏன் சீயோன் மலையை இழிவாகப் பார்க்கிறாய்? தேவன் அம்மலையை (சீயோன்) நேசிக்கிறார். என்றென்றும் வாழும்படி கர்த்தர் அம்மலையைத் தேர்ந்தெடுத்தார்.
|
18. உயர்ந்த மலையில் அவர் ஏறினார். சிறைப்பட்டோரின் கூட்டத்தை அவர் வழிநடத்தினார். எதிராகத் திரும்பியவர்கள் உட்பட, மனிதரிடமிருந்து அவர் பரிசுகளை ஏற்றார். தேவனாகிய கர்த்தர் அங்கு வசிப்பதற்கு ஏறிச்சென்றார்.
|
19. கர்த்தரைத் துதியுங்கள்! ஒவ்வொரு நாளும் நாம் சுமக்கவேண்டிய பாரங்களைச் சுமப்பதற்கு அவர் உதவுகிறார். தேவன் நம்மை மீட்கிறார்.
|
20. அவரே நமது தேவன் அவரே நம்மை மீட்கும் தேவன். நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார்.
|
21. தேவன் அவரது பகைவர்களைத் தோற்கடிக்கிறார் என்பதைக் காட்டுகிறார். அவரை எதிர்த்த ஜனங்களை தேவன் தண்டிக்கிறார்.
|
24. வெற்றி ஊர்வலத்தை தேவன் நடத்திச் செல்வதை பாருங்கள். என் அரசராகிய பரிசுத்த தேவன் வெற்றி ஊர்வலத்தை நடத்திச் செல்வதை ஜனங்கள் காண்பார்கள்.
|
25. பாடகர் முன்னால் வீர நடையிட்டுச் செல்வார்கள். பின்னர் தம்புரு மீட்டும் இளம் பெண்கள் வருவார்கள். இசைக் கலைஞர்கள் பின்னே வீர நடையிடுவார்கள்.
|
27. சின்ன பென்யமீன் அவர்களை வழிநடத்திச் செல்கிறான். அங்கு யூதாவின் பெரிய குடும்பமும் இருக்கிறது. அங்கு செபுலோன், நப்தலியின் தலைவர்களும் உள்ளனர்.
|
28. தேவனே, எங்களுக்கு உமது வல்லமையைக் காட்டும்! கடந்த காலத்தில் எங்களுக்காய் பயன்படுத்தின உமது வல்லமையைக் காட்டும்.
|
30. நீர் விரும்புவதை அந்த "மிருகங்கள்" செய்யும்படி உமது கோலைப் பயன்படுத்தும். அத்தேசங்களின் "காளைகளும்" "பசுக்களும்" உமக்குக் கீழ்ப்படியச் செய்யும். போரில் அத்தேசங்களை நீர் வென்றீர். இப்போது அவர்கள் வெள்ளியை உம்மிடம் கொண்டுவரச்செய்யும்.
|
31. எகிப்திலிருந்து அவர்கள் செல்வத்தைக் கொண்டுவரச் செய்யும். தேவனே, எத்தியோப்பியர்கள் அவர்களது செல்வத்தை உம்மிடம் கொண்டு வரச்செய்யும்.
|
33. தேவனைப் பாடுங்கள்! பழைய வானங்களினூடே அவர் தமது இரதத்தைச் செலுத்துகிறார். அவரது வல்லமையான குரலுக்குச் செவிக்கொடுங்கள்!
|
34. உங்கள் தெய்வங்களைப் பார்க்கிலும் தேவன் மிகவும் வல்லமையுள்ளவர். இஸ்ரவேலரின் தேவன் தமது ஜனங்களை பெலுமும், வல்லமையும் உள்ளோராக்குகிறார்.
|
35. தேவன் அவரது ஆலயத்தில் அதிசயமானவர். இஸ்ரவேலரின் தேவன் அவரது ஜனங்களுக்கு பெலத்தையும், வல்லமையையும் கொடுக்கிறார். தேவனைத் துதியுங்கள்!
|