2. கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன். என்னைக் குணமாக்கும்! என் எலும்புகள் நடுங்குகின்றன.
|
5. கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள். மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள். எனவே என்னை நீர் குணமாக்கும்!
|
6. கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன். என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது. என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது. உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன்.
|
7. எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர். வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று. தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.
|
10. எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள். ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.
|