1. தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். என்னோடு போரிட வந்துள்ள ஜனங்களை வெல்வதற்கு எனக்கு உதவும்.
|
2. தீமை செய்யும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். அக்கொலைக்காரரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
|
3. பாரும், பலவான்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் என்னைக் கொல்லக் காத்திருக்கிறார்கள். ஆனால் நான் பாவமோ குற்றமோ செய்யவில்லை.
|
4. அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள். ஆனால் நானோ தவறேதும் செய்யவில்லை. கர்த்தாவே, நீரே வந்து அதைப் பாரும்.
|
5. நீர் இஸ்ரவேலரின் தேவனாகிய, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர். எழுந்து அந்த ஜனங்களைத் தண்டியும். அத்தீய ஏமாற்றுக்காரருக்கு இரக்கம் காட்டாதேயும்.
|
7. அவர்களின் பயமுறுத்தல்களையும் நிந்தனையையும் கேளும். அவர்கள் கொடியவற்றைச் சொல்கிறார்கள். அவற்றை யார் கேட்டாலும் அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.
|
9. தேவனே, நீரே என் பெலன், நான் உமக்காகக் காத்திருக்கிறேன். தேவனே, உயர்ந்த மலைகளில் நீரே என் பாதுகாப்பான இடமாவீர்.
|
10. தேவன் என்னை நேசிக்கிறார். நான் வெற்றியை காண அவர் எனக்கு உதவுவார். என் பகைவர்களைத் தோற்கடிக்க அவர் எனக்கு உதவுவார்.
|
11. தேவனே, அவர்களை வெறுமனே கொன்று விடுவீரானால், என் ஜனங்கள் அதனை மறந்துவிடுவார்கள். என் ஆண்டவரும் பாதுகாவலருமானவரே, உமது வல்லமையால் அவர்களைச் சிதறடித்துத் தோல்வியை காணச் செய்யும்.
|
12. அத்தீயோர் சபித்துப் பொய்க் கூறுவர். அவர்கள் கூறியவற்றிற்காக அவர்களைத் தண்டியும். அவர்கள் அகந்தையே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்.
|
13. உமது கோபத்தில் அவர்களை அழியும். அவர்களை முற்றிலுமாக அழியும்! யாக்கோபின் ஜனங்களையும், உலகம் முழுமையையும் தேவன் ஆளுகிறார் என்பதை அப்போது ஜனங்கள் அறிவார்கள்!
|
15. அவர்கள் உணவுக்காகத் தேடியலைவார்கள், ஆனால் உணவேதும் அவர்களுக்கு அகப்படுவதில்லை. அவர்களுக்கு உறங்க இடமும் இராது.
|
16. ஆனால் நான் உம்மைப் பாடல்களால் வாழ்த்தித் துதிப்பேன். ஒவ்வொரு காலையும் உமது அன்பில் நான் களிகூருவேன். ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர். தொல்லைகள் வரும்பொழுது நான் உம்மிடம் ஓடி வரலாம்.
|
17. உம்மை வாழ்த்தும் என் பாடல்களை நான் பாடுவேன். ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர். நீரே என்னை நேசிக்கும் தேவன்.
|