1. தேவனே, என்னிடம் இரக்கமாயிரும். என் ஆத்மா உம்மை நம்புவதால் என்னிடம் இரக்கமாயிரும். துன்பங்கள் என்னைக் கடந்து செல்கையில் பாதுகாப்பிற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன்.
|
2. மிக உன்னதமான தேவனிடம் உதவி வேண்டி நான் ஜெபிக்கிறேன். தேவன் என்னை முற்றிலும் கண்காணித்துக்கொள்கிறார்.
|
3. பரலோகத்திலிருந்து அவர் எனக்கு உதவி செய்து, என்னைக் காப்பாற்றுகிறார். எனக்குத் தொல்லை தரும் ஜனங்களை தோல்வி காணச் செய்கிறார். தேவன் தனது உண்மையான அன்பை எனக்குக் காட்டுகிறார்.
|
4. என் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியிருக்கிறது. என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் மனிதரை உண்ணும் சிங்கங்களைப் போலிருக்கிறார்கள். அவர்கள் பற்கள் ஈட்டிகளைப் போலவும். அம்புகளைப் போலவும் கூர்மையானவை. அவர்கள் நாவுகள் வாளைப் போன்று கூரியவை.
|
6. அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர். நான் விழுவதற்காக அவர்கள் ஒரு ஆழமான குழியை வெட்டினார்கள். ஆனால் தாங்களே அக்கண்ணியில் விழுந் தார்கள்.
|
7. ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப் பார். அவர் என்னைத் துணிவுடனிருக்கச் செய் கிறார். நான் அவரைத் துதித்துப் பாடுவேன்.
|
8. என் ஆத்துமாவே, எழுந்திரு. வீணையே, சுரமண்டலமே இசைக்கத் தொடங்குங்கள். அதிகாலையை விழித்தெழச் செய்வோமாக!
|
9. என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம் மைத் துதிப்பேன். ஒவ்வொரு தேசத்திலும் உம் மைப்பற்றியத் துதிப்பாடல்களைப் பாடுவேன்.
|