2. தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது. அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும். சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை. அதுவே பேரரசரின் நகரமாகும்.
|
4. ஒருமுறை, சில அரசர்கள் சந்தித்து, இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள். அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள்.
|
8. ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம். தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார்.
|
10. தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர், பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர். நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம்.
|
13. அந்த உயர்ந்த சுவர்களைப் பார். சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார். வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம்.
|