1. கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவர்கள் சீயோன் மலையைப் போன்றிருப்பார்கள். அவர்கள் அசைக்கப்படுவதில்லை. அவர்கள் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.
|
2. எருசலேமைச் சுற்றிலும் மலைகள் உள்ளது போல, கர்த்தர் அவரது ஜனங்களைச் சுற்றிலும் இருக்கிறார். என்றென்றைக்கும் எப்போதும் அவர் தமது ஜனங்களைக்காப்பார்.
|
3. நல்ல ஜனங்களின் நாட்டைக் கொடிய ஜனங்கள் நிரந்தரமாக ஆளப்போவதில்லை. அவ்வாறு நிகழ்ந்தால் நல்லோரும் கூட தீய காரியங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.
|
5. கொடிய ஜனங்கள் தவறான காரியங்களைச் செய்கிறார்கள். அக்கொடியோரைக் கர்த்தர் தண்டிப்பார். இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!
|