4. இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவ துண்டு. கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள். அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும்.
|
5. அங்கு அரசர்கள் ஜனங்களை நியாயந் தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள். தாவீதின் குடும்பத்து அரசர்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள்.
|
6. எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள். "உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன். உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன். உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்."
|
7. என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக, இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.
|
8. நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக, இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன்.
|