3. நான் மரித்தவன் போலானேன்! மரணக் கயிறுகள் என்னைச் சூழ்ந்துக்கொண்டன, கல்லறை என்னை மூடிற்று. நான் அஞ்சிக் கலங்கினேன்.
|
4. அப்போது நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டேன். நான்: "கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்!" என்று கூறினேன்.
|
6. கர்த்தர் திக்கற்ற ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார். நான் உதவியற்றவனானேன், கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.
|
8. தேவனே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றினீர். நீர் என் கண்ணீரை நிறுத்தினீர். நான் விழாதபடி பார்த்துக்கொண்டீர்.
|
12. நான் கர்த்தருக்கு எதைக் கொடுக்க முடியும்? என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தரே கொடுத்தார்.
|
13. அவர் என்னைக் காப்பாற்றினார். எனவே நான் அவருக்கு ஒரு பானங்களின் காணிக்கையை அளிப்பேன். நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
|
14. நான் வாக்குறுதி அளித்தவற்றைக் கர்த்தருக்குக் கொடுப்பேன். இப்போது அவரது ஜனங்கள் எல்லோருக்கும் முன்பாக நான் போவேன்.
|
15. கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனின் மரணம் கர்த்தருக்கு மிக முக்கியமானது! கர்த்தாவே, நான் உமது ஊழியர்களில் ஒருவன்!
|
16. நான் உமது பணியாள். உமது பணிப் பெண் ஒருத்தியின் பிள்ளைகளுள் ஒருவன் நான். கர்த்தாவே, நீரே என்னுடைய முதல் போதகர்.
|
18. நான் வாக்குறுதி அளித்தவற்றைக் கர்த்தருக்குக் கொடுப்பேன். நான் இப்போது அவரது எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் போவேன்.
|