1. கர்த்தரை துதியுங்கள்! கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கிற மனிதன் சந்தோஷமாயிருப்பான். அவன் தேவனுடைய கட்டளைகளை நேசிக்கிறான்.
|
2. அவன் சந்ததியினர் பூமியில் பெரியோராயிருப்பார்கள். நல்லோரின் சந்ததியினர் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
|
4. தேவன் நல்லோருக்கு இருளில் பிரகாசிக்கும் ஒளியைப் போன்றவர். தேவன் நன்மையும், தயவும், இரக்கமுமுள்ளவர்.
|
5. தயவும், தயாளகுணமும் பெற்றிருப்பது ஒருவனுக்கு நல்லது. தனது வியாபாரத்தில் நியாயமாயிருப்பது ஒருவனுக்கு நல்லது.
|
10. தீயோர் இதைக்கண்டு கோபமடைவார்கள். அவர்கள் கோபத்தால் தங்கள் பற்களைக் கடிப்பார்கள். பின்பு அவர்கள் மறைந்து போவார்கள். தீயோர் அவர்கள் மிகவும் விரும்புவதைப் பெறுவதில்லை.
|