2. "நான் இன்றைக்கு இன்னும் மனங்கசந்து முறையிடுகிறேன். ஏனெனில் நான் இன்னும் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன்.
|
3. எங்கே தேவனைப் பார்க்கக் கூடுமென நான் அறிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். தேவனிடம் போகும் வழியை அறிய விரும்புகிறேன்.
|
4. நான் தேவனிடம் என் நியாயத்தை விளக்குவேன்.Ԕநான் களங்கமற்றவனெனக் காட்டும் விவாதங்களால் என் வாய் நிரம்பியிருக்கும்.
|
5. என் விவாதங்களுக்கு தேவன் எவ்வாறு பதிலளிப்பார் என்று அறிவேன். தேவனுடைய பதில்களைப் புரிந்துகொள்வேன்.
|
7. நான் ஒரு நேர்மையான மனிதன். என் கதையை நான் கூற, தேவன் அனுமதிப்பார். அப்போது என் நீதிபதி என்னை விடுதலையாக்குவார்!
|
9. தேவன் வடக்கே பணி செய்யும்போது, நான் அவரைப் பார்க்க முடியவில்லை. தேவன் தெற்கே திரும்பும்போதும், நான் அவரைக் காணவில்லை.
|
10. ஆனால் தேவன் என்னை அறிவார். அவர் என்னைப் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார், நான் பொன்னைப்போன்று தூயவனெனக் காண்பார்.
|
11. தேவன் விரும்புகிறபடியே நான் எப்போதும் வாழ்ந்திருக்கிறேன். நான் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தியதேயில்லை.
|
12. நான் தேவனுடைய கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிகிறேன். என் உணவைக் காட்டிலும் அதிகமாக தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளை நான் நேசிக்கிறேன்.
|
13. "ஆனால் தேவன் மாறுகிறதில்லை. ஒருவனும் தேவனுக்கெதிராக நிற்கமுடியாது. தேவன் தான் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
|
14. தேவன் எனக்கென்று அவர் திட்டமிட்டவற்றைச் செய்வார். எனக்காக வேறு பல திட்டங்களையும் அவர் வைத்திருக்கிறார்.
|
15. அதனாலே நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன். இக்காரியங்களை நான் புரிந்துக்கொள்கிறேன். ஆகையால் நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன்.
|
16. தேவன் என் இருதயத்தை இளைக்கச் (சோர்வடைய) செய்கிறார், நான் என் தைரியத்தை இழக்கிறேன். சர்வ வல்லமையுள்ள தேவன் என்னை அஞ்சச் செய்கிறார்.
|
17. என் முகத்தை மூடும் கருமேகத்தைப் போன்று எனக்கு நேர்ந்த தீயகாரியங்கள் உள்ளன. ஆனால் அந்த இருள் என்னை அடக்காது.
|